Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதை வெளிப்படுத்திய முதலமைச்சரின் உரை

August 11, 2016
in News, Politics
0
தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதை வெளிப்படுத்திய முதலமைச்சரின் உரை

தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதை வெளிப்படுத்திய முதலமைச்சரின் உரை

தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத் தொடர் கடந்த 7ம் திகதி யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, பேரவையின் இணைத்தலைவர்-வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஒரு காத்திரமான உரையை ஆற்றியிருந்தார்.

வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் என்ற எல்லையைக் கடந்து ஒரு பொறுப்புள்ள தமிழ் பற்றாளனாக நின்று அவர் தனது உரையை ஆற்றினார் என்று சொல்வதே சாலப்பொருந்தும்

ஈழத் தமிழ் மக்களின் சமகால நிலைமையை அவர் மிகத்தெளிவாக முன்வைத்தார்.

எந்தெந்த இடங்களில் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். இதற்காக ஆட்சியாளர்கள் எப்படியான அரசியல் இராஜதந்திரங்களை பிரயோகிக்கின்றனர் என்ற விடயங்கள் அனைத்தும் விலாவாரியாக விளம்பப்பட்டுள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது.

தமிழ் மக்களுக்கு நடக்கின்ற அநீதிகளை வெளிப்படையாக வடக்கு மாகாண முதலமைச்சர் கூறி வருவதால் தமிழ் அரசியல்வாதிகள் சிலருக்கு அது வெப்பாரமாக இருக்கலாம்.

ஆனால் இன்றைய நிலையில் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற சதித்திட்டங்களை இனம் காண்பதும் அதனை அம்பலப்படுத்துவதும் கட்டாயமானதாகும். இல்லையேல் தமிழ் மக்களின் எதிர்காலம் மிக மோசமானதாகி விடும்.

தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டிய அரசு அதனைக் காலம் கடத்துகிறது. செயலணிகளை அமைத்து விசாரணை என்ற பெயரில் தமக்குச் சார்பான வாக்குமூலங்களைப் பதிவு செய்து தமிழ் மக்கள்பட்ட அவலங்களை இருட்டடிப்புச் செய்ய சதித்திட்டம் நடந்தேறுகிறது.

இதுவிடயத்தில் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்ற முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் உரை ஆளும் கட்சிக்கும் அவர்களோடு நின்று ஒத்தூதுபவர்களுக்கும் மிகப்பெரும் இடஞ்சலைக் கொடுக்கும் என்பது உண்மைதான்.

அதற்காக தமிழ் மக்கள் பட்ட துன்பங்களை அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை மறந்து விடுவதென்பது சாத்தியமானதன்று.

சில வேளைகளில் எந்தப் பாதிப்புகளையும் அனுபவிக்காத-அரசுடன் இணைந்து போய் பதவிகளை அனுபவிக்க நினைக்கின்றவர்கள், நடந்தது நடந்தாக இருக்கட்டும், இனி நடப்பதை பார்க்கலாம் என்று கூறலாம்.

ஆனால் இழப்புகளின் வலியை தாங்கி நிற்கும் தமிழினத்தின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டுமாயின், வடக்கின் முதலமைச்சர் கூறியது போன்று சர்வதேச நீதிபதிகளின் விசாரணையே அவசியமாகும்.

பொதுவில் தமிழ் மக்களின் இழப்புகள் பொய்யானவை போன்றும் கேலிக்குரியதாகவும் கற்பனை போன்றதுமாக ஆக்கப்படுவதே வழமையாகிவிட்டது.

இது அனுபவித்த இழப்புகளின் துயரை மேலும் வலிமைப்படுத்துவதாக உள்ளது.

தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களுக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை.

கொலையாளிகள் ஏதோ ஒரு வகையில் தப்பித்துக் கொள்கின்றனர்.

இந்நிலையில் போர்க்குற்றம் தொடர்பில் உள்ளக விசாரணை நடந்தால் முடிவு என்ன என்பதை அவர்கள் சொல்ல முன் நாமே சொல்ல முடியும்.

இதனால்தான் போர்க்குற்றவிசாரணை சர்வதேச நீதிபதிகளால் நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் உறுதியாக உள்ளனர்.

ஆக, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரை தமிழ் மக்களை விழிப்படையச் செய்யும் என்பது திண்ணம். .

Tags: Featured
Previous Post

போர்க்குற்ற விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவையா? அடிப்படை உரிமை மனு தள்ளுபடி

Next Post

மீள்குடியேற்ற செயலணியில் முதலமைச்சரை இணைக்கப் போவதில்லை! ரணில்

Next Post
மீள்குடியேற்ற செயலணியில் முதலமைச்சரை இணைக்கப் போவதில்லை! ரணில்

மீள்குடியேற்ற செயலணியில் முதலமைச்சரை இணைக்கப் போவதில்லை! ரணில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் கதிர் நடிக்கும் ‘லிங்கம்’ இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் கதிர் நடிக்கும் ‘லிங்கம்’ இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு

June 11, 2026
மே. தீவுகள் பயிற்சியக அணியுடனான கிரிக்கெட் போட்டியில் வளர்ந்துவரும் வீரர்கள் இலங்கை அணி 148 ஓட்டங்களால் முன்னிலை

மே. தீவுகள் பயிற்சியக அணியுடனான கிரிக்கெட் போட்டியில் வளர்ந்துவரும் வீரர்கள் இலங்கை அணி 148 ஓட்டங்களால் முன்னிலை

June 11, 2026
இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்திப்பு

இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்திப்பு

June 11, 2026
மனித உரிமைகளுக்கான இல்லத்தின் நிறுவுனரின் 10ஆம் ஆண்டு நினைவு | “கண்ணீர்களின் சோலை” திறந்து வைப்பு

மனித உரிமைகளுக்கான இல்லத்தின் நிறுவுனரின் 10ஆம் ஆண்டு நினைவு | “கண்ணீர்களின் சோலை” திறந்து வைப்பு

June 11, 2026

Recent News

நடிகர் கதிர் நடிக்கும் ‘லிங்கம்’ இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் கதிர் நடிக்கும் ‘லிங்கம்’ இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு

June 11, 2026
மே. தீவுகள் பயிற்சியக அணியுடனான கிரிக்கெட் போட்டியில் வளர்ந்துவரும் வீரர்கள் இலங்கை அணி 148 ஓட்டங்களால் முன்னிலை

மே. தீவுகள் பயிற்சியக அணியுடனான கிரிக்கெட் போட்டியில் வளர்ந்துவரும் வீரர்கள் இலங்கை அணி 148 ஓட்டங்களால் முன்னிலை

June 11, 2026
இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்திப்பு

இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்திப்பு

June 11, 2026
மனித உரிமைகளுக்கான இல்லத்தின் நிறுவுனரின் 10ஆம் ஆண்டு நினைவு | “கண்ணீர்களின் சோலை” திறந்து வைப்பு

மனித உரிமைகளுக்கான இல்லத்தின் நிறுவுனரின் 10ஆம் ஆண்டு நினைவு | “கண்ணீர்களின் சோலை” திறந்து வைப்பு

June 11, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures