Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சவப் பெட்டியில் பிறந்தது.. அதிசய குழந்தை

September 12, 2016
in News
0

சவப் பெட்டியில் பிறந்தது.. அதிசய குழந்தை

அந்த சிறுமிக்கு ஏழு வயது. தன்னுடைய பிறந்த நாளை, அப்பா மற்றும் உறவினர்களுடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறாள். இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?

– இருக்கிறது. அந்தப் பெண்ணின் பிறப்பே ஒரு அதிசயம்.

அவள் பெயர் ஷெல்பி லைம்ப். கனடாவில் டோரன்டோ நகரைச் சேர்ந்தவள். இவளுடைய பிறப்பு இயற்கையின் அதிசயங்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. இவள், தாய் இறந்து பலமணி நேரம் கழித்து பிறந்தவள். அம்மாவோடு புதைகுழியில் புதைக்கப்பட்ட பிறகு பிறந்தவள்.

இவளது அதிசய பிறப்பை முதலில் இருந்தே பார்ப்போம்!

ஷெல்பியின் தாயார் ஜெனிபர். ஷெல்பி சிசுவாக தாய் வயிற்றில் இருந்தபோதே ஜெனிபர் மிகுந்த கவனத்தோடு சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தார். அவருக்கு நன்றாக கார் ஓட்டத்தெரியும். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், அன்று வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு தானே காரை ஓட்டிக்கொண்டு சென்றார். சாலையில் போய்க்கொண்டிருந்தபோது, திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்தது. கார் தாறுமாறாக ஓடியது.

என்ன செய்வது என்று ஜெனிபர் யோசிப்பதற்குள், கார் மரத்தில் பலமாக மோதிவிட்டது. அவரது தலையில் பலத்த காயம். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை, மருத்துவமனையில் சேர்த்தார்கள். டாக்டர்களின் பெரும் போராட்டத்திற்கு பின் ஜெனிபர் உயிரிழந்தார்.

தாய் இறந்துவிட்டால் வயிற்றில் இருக்கும் குழந்தையும் இறந்துவிடும். அதனால் மருத்துவ நிபுணர்கள் தாயையும், வயிற்று சிசுவையும் பரிசோதித்தார்கள். பலகட்ட சோதனைகளுக்கு பிறகு இருவரும் இறந்துவிட்டதாக சான்றிதழ் அளித்தார்கள்.

ஜெனிபரின் உடல் அன்றே சவக்கிடங்கில் கொண்டு வைக்கப்பட்டது. மறுநாள் உடல் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போதே 24 மணி நேரம் கழிந்துவிட்டது. அதன்பிறகு உறவினர்கள் பார்வையிட்டு மரியாதை செலுத்தினர். முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு சவப்பெட்டியில் உடல் வைக்கப்பட்டது. உறவினர்கள் கலைந்து சென்றனர்.

சவப்பெட்டி அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. தயார் நிலையில் இருந்த குழியில் இறக்கப்பட்டது. அப்போது எங்கிருந்தோ ஒரு அழுகுரல் கேட்டது. குழந்தையின் அழுகுரல் என்பதால் எல்லோரும் பதற்றத்தோடு தேட, அது ஜெனிபரின் சவப்பெட்டியில் இருந்து வந்தது தெரியவர, சுற்றி நின்றவர்கள் ஒருவித பீதியில் உறைந்தனர்.

கல்லறைத் தோட்ட மேற்பார்வையாளருக்கு தகவல் பறந்தது. அவர் வந்து விசாரித்தபோது, ‘இப்படி இதுவரை நடந்ததில்லை. பெட்டிக்குள் இருந்து அழுகுரல் வருகிறது’ என்றார்கள். அவர் உடனே சவப்பெட்டியை திறக்க சொல்ல, பெட்டி மேலே தூக்கப்பட்டு, மென்மையாக உடைத்து திறக்கப்பட்டது.

அங்கு அவர்களுக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் காத்திருந்தது. இறந்த தாயின் உடலில் இருந்து குழந்தை பிறந்து கிடந்து, அழுதுகொண்டிருந்தது.

உடனடியாக டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நவீன ஆம்புலன்சில் வந்திறங்கினார்கள். இறந்த தாய் உடலில் இருந்து சேய் பிரிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதை கேள்விப்பட்ட ஜெனிபரின் கணவரும், உறவினர்களும் கொதித்துப் போனார்கள். சரியாக கவனிக்காமல் இந்துவிட்டதாக அறிவித்ததற்காக மருத்துவர்கள் மீது வழக்கு போடப்போவதாக கூறினார்கள். ஆனால் மருத்துவர்கள் எல்லாமே முறைப்படி நடந்ததாக கூறினார்கள்.

தலைமை மருத்துவர் ‘‘நான் 22 வருடங்களாக இந்த துறையில் இருக்கிறேன். இதுபோன்ற அதிசயத்தை கண்டதில்லை. நான் ஜெனிபரையும் வயிற்றில் இருந்த குழந்தையையும் முழுமையாக பரிசோதித்தேன். தாய், சேயின் உடல் முழுமையாக செயலிழந்து, எந்த துடிப்பும் இல்லை என்பதை உறுதியாக தெரிந்துகொண்ட பின்புதான், இருவரும் இறந்து விட்டதாக அறிவித்தேன். மேலும் சில மருத்துவர்களும் பரிசோதித்துப் பார்த்துவிட்டுதான் கையெழுத்திட்டார்கள். இது எங்கள் அறியாமையால் நடந்தது அல்ல, இயற்கையின் அதிசயமாக நடந்திருக்கிறது.

நாங்கள் கவனக்குறைவாக இதை செய்திருந்தால்கூட, இறந்துபோன தாயின் வயிற்றில் குழந்தையால் உயிரோடு இருந்திருக்க முடியாது. இறந்து போன தாயால் குழந்தையை தன் வயிற்றில் இருந்து வெளியேற்றியிருக்கவே முடியாது. பெட்டிக்குள் அடைக்கப்பட்ட குழந்தைக்கு சுவாசமே கிடைத்திருக்கவும் செய்யாது. ஜெனிபர் விஷயத்தில் நடந்தது அனைத்துமே, இயற்கை அதிசயம்’’ என்றார்.

டாக்டர்களை நோக்கி ஜெனிபர் குடும்பத்தினர் கேள்விகள் எழுப்ப, டாக்டர்கள் இயற்கையை நோக்கி கேள்வி எழுப்ப, யாருடைய கேள்விக்கும், எங்கிருந்தும் விடை கிடைக்கவில்லை.

தாயின் மூலமாகத்தான் குழந்தை சுவாசிக்கிறது. தாய் இறந்து பலமணி நேரமாக உடல் சவக் கிடக்கில் இருந்துள்ளது. பின்பு சடங்குகள் நடத்தப்பட்டு, உடல் பெட்டிக்குள் அடைக்கப்பட்டிருக்கிறது. காற்று புகாமல் ஆக்கப்பட்டு, குழிக்குள்ளும் இறக்கப்பட்டிருக்கிறது. இத்தனை மணி நேரம் எப்படி ஒரு குழந்தையால் உயிர்பிழைத்து வாழ்ந்திருக்க முடியும்?

கேள்விகள் கேள்விகளாகவே இருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் ஒரே பதிலாக ஷெல்பி தன் தந்தையோடு வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.

நன்றாக படிக்கிறாள். எதிர்காலத்தில் மருத்துவர் ஆவேன் என்கிறாள். ஆகட்டும், அவளுக்காவது பதில் கிடைக்கிறதா என்று பார்ப்போம்.

Tags: Featured
Previous Post

மதுவில் முதலிடம் பெற்று தமிழ்ப் பண்பாட்டை இழந்து நிற்கும் யாழ்.மாவட்டம்!

Next Post

கடுமையான புயல் மழையினால் ஒன்ராறியோவின் சில பகுதிகளில் மின் தடை.

Next Post
கடுமையான புயல் மழையினால் ஒன்ராறியோவின் சில பகுதிகளில் மின் தடை.

கடுமையான புயல் மழையினால் ஒன்ராறியோவின் சில பகுதிகளில் மின் தடை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

June 24, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

நடிகர் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மாற்றல்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

June 24, 2026
அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026

Recent News

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

June 24, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

நடிகர் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மாற்றல்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

June 24, 2026
அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures