Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எழுக தமிழரே நீதி கேட்டு ஐ.நா நோக்கி – இயக்குனர் கௌதமன்

June 12, 2016
in News, Politics
0
எழுக தமிழரே நீதி கேட்டு ஐ.நா நோக்கி – இயக்குனர் கௌதமன்

எழுக தமிழரே நீதி கேட்டு ஐ.நா நோக்கி – இயக்குனர் கௌதமன்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை முடிந்து 08 ஆண்டுகள் முடிவுற்ற போதும் நீதிக்கான நெடும் பயணத்தில் பெரும் போராட்டத்தின் மத்தியில் சளைக்காமல் தமிழ் இனம் தமக்கான விடியலை மற்றும் விடுதலையைத் தேடி ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.

ஆனாலும் கடந்த ஆண்டுகளில் காணப்பட்ட பெரும் எழுச்சி கொஞ்சம் கொஞ்சமாக நம் தமிழ் மக்களின் மனங்களில் தேய்ந்து கொண்டு போகின்றது எனும் செய்தி நம் மனதில் எட்டும் போது நெஞ்சம் துடிக்கிறது.

நாம் இழந்த இழப்பினை, நம் மண்ணை, நம் உரிமையை, நம் உறவுகளின் விலைமதிக்க முடியாத உயிர்களை மற்றும் இவற்றுக்கு மேல் நமக்கான சுகந்திரத்தை, இது அத்தனையையும் இழந்து நிற்கும் நிலையில் ஒரே ஒரு நொடி நடந்து முடிந்த கடந்த கால அந்த வீரம் நிறைந்த மிகப் பெரிய உன்னதமான விடுதலைப் போராட்டத்தையும் அதற்காக உயிர் கொடுத்த கிட்டத்தட்ட 68 ஆயிரம் மாவீர்களின் உயிர் இழப்புக்களை மனதில் தாங்கும் போது எந்தத் தமிழனாலும் நிம்மதியாக தூங்க முடியாது.

இதை நினைக்கும் போது திடீரென ஒரு கருநாகம் விறைப்பாக எழும்பி படம் எடுத்து நின்றால் எப்படி இருக்குமோ அப்படி சீற்றத்தோடு மனதுக்குள் பெரும் கோபம் கொப்பளிக்கின்றது.

சிங்கள அதிகார வர்க்கங்களினால் நம் உறவுகள் நம் கண் முன் எவ்வாறு சிதறி சின்னாபின்னமாய் போனது என நினைத்தால் நம் உறவுகள் ஒருபோதும் சோர்ந்து போய்விடாது.

இந்த உலகில் யாருக்குமே கிடைக்காத அரும்பெரும் தலைவன், நம் தாய்க்கும் தாய்மொழிக்கும் சமமான, நமது தமிழீழ தேசிய தலைவன் பிரபாகரன் நம் இனத்தில் தோன்றிய உன்னத தலைவன்.

நாம் வாழும் நம் சமகாலத்தை விட அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்ற பெயர் எல்லாத் தமிழருக்கும் கிடைக்காது.

இருப்பினும் போர் முடிவுற்று 08ம் ஆண்டு நிறைவிலும் கூட நாம் இன்னும் உக்கிரத்துடனும் உறுதியுடனும் சொல்ல முடியாத ஒரு பலத்துடனும் போராட வேண்டியுள்ளது.

இந்த உலகம் அதிகாரவர்க்கத்துக்கு துணைபோகும் நாடுகளுடைய எண்ணிக்கையும் அதிகமாக காணப்படும் சூழலில் நீதியையும் தர்மத்தையும் உண்மையான இறையான்மையையும் சுமந்து நிற்கும் மற்றும் இயற்கையின் கொடையாக பெற்ற இந்த தமிழினம் ஒருபோதும் சளைத்துவிடக் கூடாது.

இனியும் இந்த உலகம் தாமதித்தால் இந்தப் பூமிப்பந்தின் ஆதியினம், உலகில் மூத்த மொழியைப் பேசுகின்ற ஒரு உன்னதமான இனம், யாருக்கும் இல்லாத வரைபடமும் வரலாறும் கொண்ட இனம் ,மற்றும் இன்னும் கலை, கலாச்சாரம், நாகரீகம், ஒழுக்கம், வீரம், அறத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு அற்புதமான இனம் தமிழினம் இனி வரும் இளைய தலைமுறை, முன்னோக்கிச் செல்ல வேண்டிய நிலையில் உள்ளது.

இந்த உலகம் தமிழரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் தொலைவில் இல்லை. அந்த நேரம் கட்டாயம் வரும். அது வரைக்கும் பொறுமையாக இருப்போம். பொறுத்தது போதும் எனும் நிலை வரும் போது என்ன முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பதை தமிழினம் உறுதியாய் சரியாக எடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கும் கோடான கோடித் தமிழர்களில் நானும் ஒருவன்.

ஜநா முன்றலில் முருகதாஸன் திடலில், வரும் 20ம் திகதி 02.00 – 06.00 மணி வரை ஒன்றாக திரளுவோம். தமிழனின் உரிமையையும் விடியலையும் மற்றும் விடுதலையையும் மீட்டு எடுக்க அந்தக் களத்தில் நின்று போராடுவோம். குரல் கொடுப்போம் என இயக்குனர் கௌதமன் தமிழ் மக்களிடம் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags: Featured
Previous Post

போர்க்குற்ற விசாரணையில் சாட்சியமளிக்க முன்னாள் புலிகள் விருப்பம்

Next Post

மதுவிடுதியில் தற்கொலை படை தீவிரவாதி? 50 பேர் பலி

Next Post
மதுவிடுதியில் தற்கொலை படை தீவிரவாதி? 50 பேர் பலி

மதுவிடுதியில் தற்கொலை படை தீவிரவாதி? 50 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

June 27, 2026
முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

June 27, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

12 மில்லியனுக்கும் அதிகமானோர் ‘ரின்’ இலக்கங்களை பெற்றுள்ளனர் ; 5 மில்லியன் பேர் காத்திருப்பதாக பிரதி அமைச்சர் நிஷாந்த தெரிவிப்பு

June 27, 2026
ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்

ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்

June 27, 2026

Recent News

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

June 27, 2026
முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

June 27, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

12 மில்லியனுக்கும் அதிகமானோர் ‘ரின்’ இலக்கங்களை பெற்றுள்ளனர் ; 5 மில்லியன் பேர் காத்திருப்பதாக பிரதி அமைச்சர் நிஷாந்த தெரிவிப்பு

June 27, 2026
ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்

ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்

June 27, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures