Wednesday, February 8, 2023
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இனப்படுகொலைக் குற்றத்தை மூடிமறைக்கவே காணாமல் போனவர்களுக்கான சான்றிதழ்!

June 17, 2016
in News, Politics
0
இனப்படுகொலைக் குற்றத்தை மூடிமறைக்கவே காணாமல் போனவர்களுக்கான சான்றிதழ்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இனப்படுகொலைக் குற்றத்தை மூடிமறைக்கவே காணாமல் போனவர்களுக்கான சான்றிதழ்!

படையினருக்கு நற்சான்று வழங்குவதற்கும் இறுதி யுத்தத்தில் நடைபெற்ற இனப்படுகொலை, போர்க்குற்ற மீறல்களை மூடிமறைப்பதற்காகவே காணாமல் போனவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

காணாமல் போனவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது தொடர்பான அமைச்சரவையின் முடிவு தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல் போனவர்கள் என்பது 1983ம் ஆண்டு ஆரம்பித்து 1994ம் ஆண்டு தீவிரமாகியது. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆட்சிக்காலத்தல் செம்மணி படுகொலை யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகமாக இடம்பெற்றது.இலங்கை பூராகவும் இது நடைபெற்றது.

வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியாமலேயே உள்ளது. இறுதி யுத்தத்தின்போது சரணடைந்தவர்கள் உறவினர்களால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுக் காணாமல் போயுள்ளார்கள்.

இலங்கை அரசாங்கம் காணாமல் போனவர்கள் தொடர்பில் வெளிப்படைத்தன்மையான அறிவித்தலை வெளியிடுமா? குறிப்பாக செம்மணியில் காணாமல் போனவர்கள் அங்கு புதைக்கப்பட்டார்கள் என்பதை வெளிப்படுத்துமா?

தற்போது காணாமல் போனவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது எனக் கூறுவது ஐக்கிய நாடுகள் சபையை ஏமாற்றுகின்ற கண்துடைப்பு நாடகமாக இதனைப் பார்க்கமுடியும்.

இதிலே காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரசு சொல்லவேண்டும்.காணாமல் போனவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதை விடுத்து, குறிப்பாக 2009ம் ஆண்டு மே மாதம் இறுதிப்போரின் போது சரணடைந்தவர்கள், மனைவி, சகோதரர்கள், தாய், தந்தையர்களால் ஒப்படைக்கப்பட்டவர்கள் எங்கே என்பதற்கு பதில் கூறவேண்டும்.

ஆனால் இதற்கு இதுவரை பதில் இல்லை.

காணாமல் போனவர்கள் தொடர்பில் இரு வகையுள்ளது. ஒன்று இறுதிப் போரில் சரணமடைந்தவர்கள், மற்றையது கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள்.

ஆகவே இவர்கள் மொத்தமாக ஏறக்குறைய 20 ஆயிரம் பேர்வரை இருக்கும் என்று எங்களுடைய மதிப்பீடுகளிலும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மதிப்பீடுகளிலும் கூறப்படுகின்றது.

இது ஒருவர், இருவர் காணாமல் போன சம்பவம் அல்ல. 20 ஆயிரம் பேர் காணாமல் போனது, சிறிய விடயம் அல்ல, இரண்டு கோடி மக்களைக் கொண்ட நாட்டில் இது சாதாரண விடயம் அல்ல.

காணாமல் போனவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை போர்க்குற்ற விசாரணைகளில் இந்த விடயத்தை எடுத்துவிடும் என்பதற்காகக் காணாமல் போன உறவுகளை மனதளவில் நோகச்செய்து இந்த விடயத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாகவே இதனைப் பார்க்கின்றோம்.

இதுமட்டுமல்ல; சரணடைந்து காணாமல்போனோர் தொடர்பில் எவ்வித முடிவும் இன்றி எமது மக்கள் அங்கலாய்த்துக்கொண்டுள்ள நிலையில் அவர்களை காணாமல் போய்விட்டார்கள் அல்லது அவர்கள் இறந்திருக்கலாம் என்று பொங்கல் தினத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று மக்களை மனதளவில் நோகடித்து எதிர்காலத்தில் நடைபெறவுள்ள விசாரணைகளில் ஈடுபடாது ஒதுங்கியிருக்கச்செய்யும் சதிமுயற்சியே இதுவாகும்.இவை பாரதூரமான பிரச்சினை;

இனப்படுகொலை, போர்க்குற்ற மீறல்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவை தொடர்பாக சர்வதேசம் விசாரணை செய்யவேண்டுமென்ற எங்களுடைய கோரிக்கை தற்போது வெளிநாட்டுப் பங்களிப்பு இல்லாத உள்நாட்டு விசாரணை என்று சொல்லியும் இதுவரை எதுவும் நடைபெறவில்லை.

15 மாதத்தில் நல்லாட்சி, அரச படையினருக்கு நற்சான்றிதழ் வழங்குவது போன்றே காணாமல் போனவர்களுக்கு சான்றிதழ் வழங்க முயற்சிப்பதும் அமைந்து விடுகிறது.

இனப்படுகொலை, யுத்தக் குற்றங்களையும் மூடி மறைக்கும் திட்ட மிட்ட முயற்சியே இதுவாகும் என்றார்.

Tags: Featured
Previous Post

வவுனியா, இளம் கண்டுபிடிப்பாளர் ஜாக்சனிடம் 100 கோடி ரூபாய் கப்பம் கோரி மிரட்டல்!

Next Post

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

Next Post
ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை

மல்லாவி கலைஞர்களின் வனவேட்டை

August 26, 2022
கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

September 13, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Easy24News

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

ஆர்ப்பாட்ட நிலைமைகளைக் கட்டுப்படுத்த கொழும்பு கோட்டையில் இராணுவம் குவிப்பு!

ஆர்ப்பாட்ட நிலைமைகளைக் கட்டுப்படுத்த கொழும்பு கோட்டையில் இராணுவம் குவிப்பு!

February 8, 2023
13ஐ தீயிட்டு கொழுத்தி பௌத்த தேரர்கள் போராட்டம்

13ஐ தீயிட்டு கொழுத்தி பௌத்த தேரர்கள் போராட்டம்

February 8, 2023
மாதாந்த செலவுகளுக்காக பெருந்தொகை பணத்தை செலவிடும் கோட்டாபய ராஜபக்ச

ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணத்திற்கு உரிமை கோரினார் கோட்டா

February 8, 2023
யாழ். வர்த்தகர்கள் 12 பேருக்கு 3 இலட்சம் ரூபா தண்டம்!

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியில் கலந்துகொண்ட ஏழு பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

February 8, 2023

Recent News

ஆர்ப்பாட்ட நிலைமைகளைக் கட்டுப்படுத்த கொழும்பு கோட்டையில் இராணுவம் குவிப்பு!

ஆர்ப்பாட்ட நிலைமைகளைக் கட்டுப்படுத்த கொழும்பு கோட்டையில் இராணுவம் குவிப்பு!

February 8, 2023
13ஐ தீயிட்டு கொழுத்தி பௌத்த தேரர்கள் போராட்டம்

13ஐ தீயிட்டு கொழுத்தி பௌத்த தேரர்கள் போராட்டம்

February 8, 2023
மாதாந்த செலவுகளுக்காக பெருந்தொகை பணத்தை செலவிடும் கோட்டாபய ராஜபக்ச

ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணத்திற்கு உரிமை கோரினார் கோட்டா

February 8, 2023
யாழ். வர்த்தகர்கள் 12 பேருக்கு 3 இலட்சம் ரூபா தண்டம்!

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியில் கலந்துகொண்ட ஏழு பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

February 8, 2023
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures