Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆட்சிக் கனவு பறிபோகும் அபாயத்தில் கோத்தபாயவின் கைப்பாவையாக மாறிப்போன மஹிந்த?

October 12, 2016
in News, Politics
0
ஆட்சிக் கனவு பறிபோகும் அபாயத்தில் கோத்தபாயவின் கைப்பாவையாக மாறிப்போன மஹிந்த?

ஆட்சிக் கனவு பறிபோகும் அபாயத்தில் கோத்தபாயவின் கைப்பாவையாக மாறிப்போன மஹிந்த?

தற்போதைய அரசியல் நிலைப்பாட்டில் யார் அடுத்து ஆட்சியமைப்பது என்பதனை விடவும் அடுத்து யார் ஜனாதிபதியாக வரப்போவது? என்ற ஆவலே அதிகமாக காணப்படுகின்றது.

தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு முக்கிய போட்டியாக இருப்பது மைத்திரியோ அல்லது ரணிலோ அல்ல மாறாக கோத்தபாயவே மஹிந்தவிற்கு முக்கிய போட்டியாக இருந்து வருகின்றார்.

இந்தப் போட்டி எதிர்ப்பாக மாறக்கூடிய தருணம் ஏற்பட்டு வருவதாக அரசியல் தரப்பு அவதானிகள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

தற்போதைய அரசியல் களத்தில் மஹிந்தவை விடவும் கோத்தபாயவிற்கே அதிகளவிலான மக்கள் செல்வாக்கு காணப்பட்டு வருகின்றது. அதே சமயம் மஹிந்த ராஜபக்ச செயற்படுவதும் கோத்தபாயவின் கட்டளைகளின் அடிப்படையிலேயே என்றும் கூறப்படுகின்றது.

கோத்தபாய இல்லாவிட்டால் மஹிந்த இல்லை, மஹிந்தவின் செல்வாக்கு அனைத்திற்கும் பின்புலம் கோத்தபாயவே என்ற நிலையே தற்போதைய அரசியல் களத்தில் இருப்பதாகவும் அரசியல் நோக்குனர்கள் தெரிவத்து வருகின்றனர்.

அண்மையில் கோத்தபாய நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்த போது மஹிந்த தரப்பு பதறிப்போனது என்றே கூறவேண்டும். அதற்கு முன்னர் மஹிந்த அணியில் எவர் கைது செய்யப்பட்ட போதும் இல்லாத தடுமாற்றம் அன்று ஏற்பட்டது அவதானிக்கப்பட்டது.

அதே சமயம் கோத்தபாயவிற்காக 60 வழக்கறிஞர்கள் ஒரே சமயம் ஆஜராகி இருந்தனர். இது இலங்கை வரலாற்றிலேயே முதல் தடவை நிகழ்ந்த விடயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் தொடர்ந்தும் மௌனம் காத்து வந்த கோத்தபாய சரியான நேரத்தில் அதாவது மஹிந்தவிற்கு அரசியல் வாழ்வு அஸ்தமித்துப்போகும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்ட வேளையிலேயே களத்தில் குதித்துள்ளார்.

மேலும் கோத்தபாய களத்தில் இறங்கிய பின்னர் ஏற்பட்ட சடுதியான மாற்றம் மஹிந்தவிற்கு மீண்டும் அரசியல் பலத்தோடு மக்கள் மத்தியிலும் செல்வாக்கினை ஏற்படுத்தியது என்பதே உண்மை.

குறிப்பாக கோத்தபாய கூட்டு எதிர்கட்சி நடாத்திய மக்கள் சந்திப்பில் கலந்து கொள்ளாமலும் அது தொடர்பில் எந்தவித கருத்துகளும் வெளியிடாமல் அமைதியாக இருந்தும் வருகின்றார். இதேவேளை மஹிந்தவின் கருத்துகளும் வெளிப்படையற்ற கருத்துகளே.

இவற்றை தொகுத்து நோக்கும் போது மஹிந்த தரப்பின் அடுத்த திட்டம் என்ன என்பதனை தீர்மானிப்பது கோத்தபாயவே என்பது தெளிவு படுத்தப்படும்.

இதேவேளை மஹிந்தவை வெளிப்படையாக விமர்சிப்பவர்களும் கூட கோத்தபாயவை விமர்சிக்க தயங்குகின்றனர். இது அவரின் செல்வாக்கினை காட்டுகின்றது.

இதேவேளை எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி வேட்பாளராகவும் கோத்தபாய நிற்க ஆயத்தமாகி வருகின்றார். ஆட்சிக் கனவோடு வலம் வரும் மஹிந்தவிற்கு இது பெரும் சவாலாக அமையும் என்பது நிச்சயம்.

ஏற்கனவே பசிலின் ஆதரவு கோத்தபாயவிற்கே என்பதும் ஒரு பக்கம் உறுதிபடுத்தப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக மஹிந்தவிற்கு சவாலாகவும் போட்டியாகவும் அமையப் போவது கோத்தபாயவே என்றும் கூறப்படுகின்றது.

நிலைமாறிவரும் அரசியல் களத்தில் மஹிந்தவிற்கு கோத்தபாய போட்டியாக உருவாகி வருவது மஹிந்த அறிந்திருந்த போதும் அதற்கு எதிர்க்கருத்துகளை வெளிப்படுத்த அவரால் முடியாது காரணம் அவரின் செல்வாக்கும் கட்டுப்பாடும் தற்போது கோத்தபாயவிடம் இருப்பதாகவே தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த கால மஹிந்த ஆட்சியிலும் கோத்தபாயவே முக்கிய விடயங்களில் தீர்மானங்களை எடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

வந்துவிட்டது பேஸ்புக் ஆபிஸ்! சூப்பரான வசதி பாஸ்

Next Post

மஹிந்தவை ஏமாற்றிய கருணா – விபரம் உள்ளே

Next Post
மஹிந்தவை ஏமாற்றிய கருணா – விபரம் உள்ளே

மஹிந்தவை ஏமாற்றிய கருணா - விபரம் உள்ளே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

July 14, 2026
வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

July 14, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை – சபாநாயகர் தெரிவிப்பு

July 14, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட விளக்கமறியல் கைதி

July 14, 2026

Recent News

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

July 14, 2026
வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

July 14, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை – சபாநாயகர் தெரிவிப்பு

July 14, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட விளக்கமறியல் கைதி

July 14, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures