காஜல் அகர்வால் சில மாதங்களுக்கு முன்பு ‘கா பிலிம்ஸ்’ என்ற தன் சொந்த படத்தயாரிப்பு கம்பெனி மூலம் சினிமா தயாரிப்பில் இறங்கப் போவதாக அறிவித்தார். பிரசாந்த் வர்மா இயக்கத்தில் ‘ஆவ்’ என்ற தெலுங்குப் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்கப் போவதாகச் சொன்னார்கள். ஆனால், தற்போது படத்தயாரிப்பில் இறங்கப் போவதில்லை என காஜல் முடிவெடுத்து விட்டாராம். தன்னால் தயாரிப்பு நிறுவனத்தை சிறப்பாக நடத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்ததே அவர் அப்படி முடிவெடுக்கக் காரணம் என்கிறார்கள்.













