நடிகர் சூர்யா, தனது மனைவி நடித்து வரும் பொன்மகள் வந்தாள் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா 36 வயதினிலே படம் மூலம் நடிப்புக்கு ரீஎண்ட்ரி கொடுத்தார். அப்போது முதல் பிஸியாக நடித்து வருகிறார். மகளிர் மட்டும், காற்றில் மொழி, ஜாக்பாட், ராட்டசி, நாச்சியார், செக்கச் சிவந்த வானம் என தொடர்ந்து அவரது படங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
தற்போது அவர் நடித்து வரும் படம் பொன்மகள் வந்தால். இப்படத்தை ஜெ.ஜெ.பெட்ரிக் என்பவர் இயக்கி வருகிறார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் சூர்யா பொன்மகள் வந்தாள் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார். இது படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி அளித்தது. படக்குழுவினர் சூர்யாவுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
															
