நடிகர் சல்மான்கான், சில மாதங்களுக்கு முன்பு மும்பை பாந்த்ரா பகுதியில் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த தொலைக்காட்சி நிருபர் ஒருவர் அதை படம் எடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சல்மான்கான் அந்த நிருபரை தாக்கும்படி தனது மெய்காவலர்களுக்கு உத்தரவிட்டார். அவர்களும் அவரை காரில் இருந்து வெளியே இழுத்து போட்டு அடித்துள்ளனர். சல்மான்கானும் சேர்ந்து தாக்கி உள்ளார்.
இதுகுறித்து தொலைக்காட்சி நிருபர் அந்தேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்த தொலைக்காட்சி நிருபர் அந்தேரி மெட்ரோபாலிடன் சிட்டி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம். சல்மான்கான் மீது வழக்கு பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட்டது.