தமிழில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு நடிகர் விஜய்சேதுபதி கால்சீட் டைரி நிரம்பிவிட்ட நிலையிலும், மார்கோனி மத்தாய் என்கிற படத்தின் மூலம் முதன்முதலாக மலையாளத்தில் அடியெடுத்து வைத்துள்ளார் விஜய்சேதுபதி. எர்ணாகுளத்தில் நடைபெற்றுவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் தற்போது விஜய்சேதுபதி கலந்துகொண்டு நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ஹீரோவாக வங்கி ஒன்றின் வாட்ச்மேன் ஆக நடிக்கிறார் ஜெயராம். இதில் முக்கியமான கேரக்டரில் விஜய்சேதுபதி நடிப்பதாக ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. தற்போது இந்த படத்தில், அவர் கொஞ்ச நேரமே வந்துபோகும் கெஸ்ட் ரோலில் தான் நடிக்கிறார் என தெரியவந்துள்ளது. குறிப்பாக நடிகர் விஜய்சேதுபதி ஆகவே இந்தப்படத்தில் தான் நடிப்பதாக அவரே தனது கதாபாத்திரம் குறித்து வெளிப்படுத்தியுள்ளார்.