என்ஜிகே, காப்பான் ஆகிய படங்களை முடித்துவிட்ட சூர்யா, தற்போது இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிவரும் சூரரைப் போற்று என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார் அபர்ணா
இரண்டாவது கட்ட படப்பிடிப்பை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக கோரியுள்ள அவர், இயக்குனர் சுதா கொங்கரா பற்றி குறிப்பிடும்போது, மை அயர்ன் லேடி என்றும் சூர்யா பற்றி குறிப்பிடும்போது மில்லியன்களில் ஒருவர் என்றும் சிலாகித்துக் கூறியுள்ளார்.
தமிழில் வெறும் இரண்டே படங்களில் மட்டுமே நடித்துள்ள ஒரு சாதாரண நடிகையான அபர்ணா பாலமுரளியை, சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க சுதா கொங்கரா தேர்வு செய்ததில் இருந்தே, இந்த படம் வழக்கமான ஒரு சூர்யா படமாக இருக்காது என நீங்கள் உணரலாம் என இந்த படம் பற்றி படத்தின் தயாரிப்பாளரான 2டி ராஜசேகர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.