சூர்யாவின் 38வது படத்தின் படப்பிடிப்பு இன்று(ஏப்.,8) முதல் சென்னையில் தொடங்கியுள்ளது. இறுதிச்சுற்று புகழ் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கும் இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சூர்யா படத்திற்கு இவர் இசையமைப்பது இதுவே முதல்முறை.
இந்த படத்தில் ஒரு முக்கியமான பாடல் ஒன்றுக்காக கேரளாவைச் சேர்ந்த தாய்க்குடம் பிரிட்ஜ் என்கிற பிரபல இசைக் குழுவோடு கைகோர்த்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
இதற்கான பாடலை கனா படத்தின் இயக்குனரான அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். ’96’ புகழ் இசையமைப்பாளர் கோவிந்த வசந்தா உருவாக்கியதுதான் இந்த தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழு என்பது குறிப்பிடத்தக்கது.