Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ரஞ்சித் ட்வீட்டால் சர்ச்சை: ‘அறம்’ இயக்குநர் கோபி நயினார் விளக்கம்

November 14, 2017
in Cinema
0

சமூக வலைதளத்தில் ரஞ்சித் ட்வீட்டால் சர்ச்சையானதைத் தொடர்ந்து, இயக்குநர் கோபி நயினார் விளக்கமளித்துள்ளார்.

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘அறம்’. விமர்சன ரீதியாக இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. பல்வேறு திரையுலக பிரபலங்களும் இப்படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

இப்படம் குறித்து இயக்குநர் ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், “அறம் வென்றது பெரும் மகிழ்ச்சி. கற்பி ஒன்று சேர் போராடு. இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கும் தோழர் நயன்தாராவுக்கு நன்றியும் வாழ்த்துகளும்” என்று பாராட்டு தெரிவித்தார்.

ரஞ்சித்தின் பாராட்டே சமூக வலைதளத்தில் பெரும் எதிர்வினைகளை கொடுத்திருக்கிறது. கோபி நயினார் பெயரைக் குறிப்பிடாமல் வெளியிட்ட பதிவால், பலரும் அவரை சாடினார்கள்.

இந்த சர்ச்சை தொடர்பாக கோபி நயினார் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

இயக்குனர் ரஞ்சித்தும், நானும் சமூக அரசியலிலும், முன்னேற்றத்திலும் ஒரே இலக்கை நோக்கி பயணிப்பவர்கள். ஆனால் சில நலவிரும்பிகள் அன்பின் மிகுதியால் தங்கள் கருத்துகளை பதிவுசெய்து வருகின்றனர். இது ஆரோக்கியமான சூழலல்ல. தோழர்களே! படைப்பிற்கான விமர்சனங்களை வரவேற்கிறேன்.

நானும், இயக்குனர் ரஞ்சித்தும் இந்த சமூகத்தில் செய்ய வேண்டிய வேலைகளும், கடமைகளும் ஏராளம் இருக்கிறது. அதில் குறிப்பாக நாங்கள் இருவரும் ஒருமித்து செயல்பட வேண்டிய கட்டாயமும் கூட. அப்போது தான் இந்த பலம் எல்லோரையும் ஒருங்கிணைப்பதற்கான காரணமாக அமையக் கூடும்.

ஆதலால் உறவுகளை சிக்கல் ஆக்குகின்ற எந்தவொரு பதிவுகளையும் நான் அனுமதிக்க மாட்டேன். நலம் விரும்பிகளின் பதிவுகள் யாருக்கேனும் மனவேதனையைத் தந்திருந்தால் அவர்களுக்கு என் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு கோபி நயினார் தெரிவித்துள்ளார்.

Previous Post

களத்தில் தீவிரமாகச் செயல்படவில்லை எனில் என் ஆட்டமே ஒன்றுமற்றதாகி விடும்

Next Post

ஜி.வி. பிரகாஷ் சொல்லும் ‘அந்த நாள்’ மட்டும் வரவேக் கூடாது கடவுளே

Next Post
ஜி.வி. பிரகாஷ் சொல்லும் ‘அந்த நாள்’ மட்டும் வரவேக் கூடாது கடவுளே

ஜி.வி. பிரகாஷ் சொல்லும் 'அந்த நாள்' மட்டும் வரவேக் கூடாது கடவுளே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures