Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நெஞ்சில் துணிவிருந்தால்’ நாயகியிடம் மன்னிப்பு கோரிய சுசீந்திரன்

November 13, 2017
in Cinema
0
நெஞ்சில் துணிவிருந்தால்’ நாயகியிடம் மன்னிப்பு கோரிய சுசீந்திரன்

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் நாயகி மெஹ்ரீன் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. இதற்காக மெஹ்ரீனிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ திரைப்படத்தின் எடிட்டட் வெர்சன் இன்று முதல் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்படுகிறது.

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப், விக்ராந்த், மெஹ்ரீன், துளசி, ஷாதிகா நடிப்பில் உருவான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ திரைப்படம் நவம்பர் 10-ம் தேதி அன்று வெளியாகி திரை அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. விமர்சகர்கள், மக்களின் கருத்து மற்றும் நலம் விரும்பிகளின் கருத்துகளை கருத்தில் கொண்டு ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படக்குழு கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கியுள்ளது.

இது பற்றி இயக்குநர் சுசீந்திரன் கூறுகையில் ,” ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் இருபது நிமிடத்தை நாங்கள் நீக்கி உள்ளோம். கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன. படத்தில் இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் புதிய வெர்சன் இன்று நண்பகல் 12 மணி முதல் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்பட்டுள்ளது.

நாங்கள் 15 நாட்கள் மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினோம். மெஹ்ரீன் நடித்த காட்சிகளை சூழ்நிலை காரணமாக நீக்கினோம். இதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார் இயக்குநர் சுசீந்திரன்.

Previous Post

தமிழ்நாடு பாட்மிண்டன் சங்க தலைவராக அன்புமணி மீண்டும் தேர்வு

Next Post

‘அறம்’ பாராட்டு ட்வீட்டால் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் இயக்குநர் ரஞ்சித்

Next Post
‘அறம்’ பாராட்டு ட்வீட்டால் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் இயக்குநர் ரஞ்சித்

'அறம்' பாராட்டு ட்வீட்டால் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் இயக்குநர் ரஞ்சித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures