Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

இந்தியா என்ற ஒரே சினிமா : பார்வதி

November 8, 2017
in Cinema
0
இந்தியா என்ற ஒரே சினிமா : பார்வதி

சமீபகாலமாக தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்டிலும் நடிக்க தொடங்கியுள்ளனர். அந்தவகையில் மலையாளத்தில் பிரபலமான நடிகையும், தமிழில் பூ, மரியான போன்ற படங்களில் நடித்தவருமான பார்வதியும், இர்பான் கான் உடன் “காரிப் காரிப் சிங்கிள்” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தவாரம் வெள்ளிக்கிழமை (நவ., 10) வெளியாக உள்ள இப்படம் பற்றியும், தனது பாலிவுட் அறிமுகம் குறித்தும் நம்மோடு அவர் பகிர்ந்து கொண்டதாவது…

பாலிவுட் படத்தில் நடிக்க என்ன காரணம்?
காரிப் காரிப் படத்தின் கதை தான் முக்கிய காரணம். கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இயக்குநர் என்னிடம் கதை சொன்னபோது சிரித்து கொண்டே இருந்தேன், அந்தளவுக்கு நகைச்சுவையான படம். இன்னொரு விஷயம் இயக்குநர் தனுஜா சந்திரா படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். தனுஜா, ஹிந்தியில் மட்டுமல்ல வேறு எந்த மொழியிலும் இந்த கதையை இயக்கியிருந்தாலும் நிச்சயம் நான் நடித்திருப்பேன். என்னை பொறுத்தமட்டில் மொழி ஒரு பிரச்னை இல்லை, கதை தான் முக்கியம். மராத்தி, பெங்காலி, போஜ்புரி படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் கூட நடிப்பேன்.

பாலிவுட் சினிமா பற்றி உங்கள் கருத்து?
என்னை பொறுத்தமட்டில் எந்த துறையும் எனக்கு புதிது கிடையாது. எல்லாம் இந்தியா என்ற ஒரு சினிமா துறை தான். நான், தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளேன். தெலுங்கு படத்தில் மட்டும் நடிக்கவில்லை, காரணம் எனக்கான கதைகள் அங்கு இல்லை. நான் நடித்த 18 படங்களை போலவே காரிப் காரிப் சிங்கிள் படத்திலும் நடித்தேன்.
இர்பான் கான் உடன் பணியாற்றிய அனுபவம் பற்றி?
இர்பான் உடன் பணியாற்றியது மகிழ்ச்சியான தருணம். அவர் எப்போதும் கலகலப்பாக இருப்பவர். அப்படிப்பட்ட ஒருவருடன் நடிப்பது நம்மையும் கலகலப்பாக்கும். என்னை பொறுத்தமட்டில் அவருடன் நடித்ததை ஒரு நடிப்பு பட்டறையில் பயிற்சி பெற்றதை போன்றே உணர்கிறேன். அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்று கொண்டேன்.

இர்பானிடம் உள்ள ஏதாவது ஒரு கெட்ட பழக்கம்?
இர்பான் உடன் நான் நிறைய நேரம் செலவழிக்க முடியவில்லை, அதனால் அவரிடம் உள்ள கெட்ட பழக்கத்தை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவரிடம் ஒரு விஷயத்தை நான் கவனித்தேன். அதாவது, நான் தான் இயக்குநரிடம் அதிக கேள்வி கேட்கிறேன் என்றால் அவர் என்னை விட அதிகமாக கேள்வி கேட்பார். மற்றபடி வேறு எதுவும் எனக்கு தோன்றவில்லை. மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு வந்தால் அப்போது பார்த்து சொல்கிறேன்.

ஒரு படத்தை தேர்வு செய்யும் முன் நீங்கள் முன்னுரிமை கொடுப்பது ஹீரோவுக்கா… இல்லை இயக்குநருக்கா…?
எனக்கு கதை தான் மிக மிக முக்கியம். அதன்பிறகு இயக்குநர் யார் என்று பார்ப்பேன். ஏனென்றால் அவர் தான் அந்த படத்தின் கேப்டன். மற்றபடி யார் ஹீரோ என்றெல்லாம் பார்க்கமாட்டேன். கதை பிடித்திருந்தால் போதும், ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன். இந்த காரிப் காரிப் சிங்கிள் படம் கமிட்டானபோது கூட யார் ஹீரோவாக நடிக்கிறார்கள் என்று தெரியாது. கதை பிடித்திருந்தது நடித்தேன்.

பாலிவுட்டில் உள்ள மூன்று கான்களில், உங்களுக்கு பிடித்தவர் யார்?
அப்படியா யாரையும் குறிப்பிட்டு சொல்ல தெரியவில்லை. ஒவ்வொருத்தருக்கும், அழகு, புகழ், பலம், பலவீனம் எல்லாம் உள்ளது. ஆகையால் மூவரில் யார் பிடித்தமானவர்கள் என்று என்னால் சொல்ல முடியவில்லை.

இவ்வாறு பார்வதி கூறினார்.

Previous Post

சிரஞ்சீவி வீட்டில் திருட்டு: வேலைக்காரர் கைது

Next Post

நடிகர்கள் கூச்சமின்றி, அச்சமின்றி இருக்க வேண்டும்: வித்யாபாலன்

Next Post

நடிகர்கள் கூச்சமின்றி, அச்சமின்றி இருக்க வேண்டும்: வித்யாபாலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures