வியட்நாம் ஹோ சி மின் சிட்டியில் நடைபெற்ற ஆசிய மகளிர் குத்துச் சண்டை இறுதிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். வட கொரிய வீராங்கனை ஹ்யாங் மீ கிம்மை அவர் தோற்கடித்து இறுதிப் போட்டியை வென்றார்.
2016 ரியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு மேரி கோம் தகுதி பெறவில்லை. இந்நிலையில் ஆசிய மகளிர் குத்துச்சண்டை போட்டியில் மேரி கோம் மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் குத்துச்சண்டை வீரங்கானைகளுக்கு மீண்டும் உற்சாகம் அளித்துள்ளார் கோம்.
கடைசியாக 2014ஆம் ஆண்டு நடந்த ஏசியன் கேம்ஸ் போட்டியில் தான் மேரி கோம் பதக்கம் வென்றார். அதில் 51 கிலோ பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றிருந்தார்.
ஆசிய குத்துச்சண்டை போட்டிகளில் மேரி கோம் வெல்லும் 6வது பதக்கம் இது. இதற்கு முன் 5 முறை தங்கமும், 1 வெள்ளிப் பதக்கமும் அவர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.