அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பூத்நாத் மற்றும் அதன் இரண்டாம் பாகமான பூத்நாத் ரிட்டர்ன்ஸ் இரண்டும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாராட்டை பெற்றன. அதிலும் இரண்டாம் பாகம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.
இதனால், படக்குழு பூத்நாத் படத்தின் மூன்றாம் பாகத்தையும் உருவாக்க உள்ளனர். இதன் கதை முந்தைய பாகத்தின் தொடர்ச்சியா என்று தெரியவில்லை, ஆனால் அமிதாப்பை மீண்டும் நடிக்க வைக்க படக்குழு தீர்மானித்திருக்கிறது.
இதுதொடர்பாக அவரிடம் பேசி வருகின்றனர். தற்போது படத்திற்கான திரைக்கதை உருவாக்கும் பணி நடந்து வருகிறது.
அபே சோப்ரா இயக்க உள்ளார். விரைவில் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.