நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் சு.திருநாவுக்கரசர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வை மாநில அரசு தடுத்து நிறுத்தாத காரணத்தால் மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பை இழந்த தலித் மாணவி அனிதா, தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தற்கொலைக்கு மத்திய அரசும், மாநில அரசும்தான் பொறுப்பாகும். அனிதாவின் தற்கொலையினால் பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சார்பாக ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது.