Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

12 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவை மிரட்டும் புயல்

August 25, 2017
in World
0
12 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவை மிரட்டும் புயல்

அமெரிக்காவை 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் புயல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மெக்சிகோ வளைகுடா கடலில் அதிபயங்கர புயல் உருவாகியுள்ளது. அதற்கு ‘ஹஸ்லே’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதனால் கடலின் நீர்மட்டம் வழக்கத்தைவிட 12 அடி உயர்ந்துள்ளது. டெக்சாஸ், லூசியானா மற்றும் வடக்கு மெக்சிகோ பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை கொட்டுகிறது. 97 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் அங்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெக்சாஸ் தென் கடலோர பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. மேலும் கடலோரம் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.

லூசியானா மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் பேரிடர் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ‘ஹார்வி’ புயல் இன்று அல்லது நாளை (26-ந்தேதி) அதிகாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 201 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் கனமழையும் வெள்ள அபாயமும் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மெக்சிகோ வலைகுடா பகுதி எண்ணை வளம் மிக்கது. இங்கிருந்து மட்டும் அமெரிக்காவுக்கு தேவைப்படும் 45 சதவீத எண்ணை கிடைக்கிறது. எனவே இங்கு ஏராளமான எண்ணை சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன.

இங்கு நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 67 ஆயிரம் பாரல்கள் கச்சா எண்ணை கிடைக்கிறது. மேலும் தினமும் 472 மில்லியன் கியூர்க் மீட்டர் இயற்கை எரிவா உற்பத்தியாகிறது. தற்போது ஹார்வி புயல் காரணமாக கார்பஸ் கிருஸ்டி முதல் டெக்சாஸ் வரையுள்ள எண்ணை சுத்திகரிப்பு ஆலைகள் மூடப்பட்டன. அதனால் எண்ணை உற்பத்தியும், இயற்கை எரிவாயு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு புளோரிடாவை வில்மா புயல் கடுமையாக தாக்கியது. அதைதொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் புயல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

Previous Post

உலகில் ஆண்களுக்கு அனுமதியில்லாத கிராமம் இது!

Next Post

1300 வருடங்களாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை

Next Post
1300 வருடங்களாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை

1300 வருடங்களாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures