ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள ஸ்பைடர் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ளது. ஆனால் இந்த படத்தை முதலில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நேரடியாக தயாரிக்க திட்டமிட்டார்களாம். அதனால் இந்தி நடிகை பரணிதி சோப்ராவை நாயகியாக புக் பண்ணியுள்ளனர். மகேஷ்பாபுவையும், அவரையும் வைத்து சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார் முருகதாஸ்.
ஆனால், பரிணிதி சோப்ராவுக்கு தமிழ், தெலுங்கு வசன உச்சரிப்புகள் சரியாக வரவில்லையாம். அதன்பிறகுதான் அவரை நீக்கி விட்டு, ரகுல்பிரீத் சிங்கை புக் பண்ணியுள்ளனர். அதோடு, மூன்று மொழிப்படமான ஸ்பைடரை பின்னர் இரண்டு மொழிப்படமாக்கி தமிழ், தெலுங்கில் தயாரிக்க முடிவு செய்துள்ளனர். அதனால் இந்தியில் நேரடியாக வெளியாக வேண்டிய ஸ்பைடர் படம் தற்போது டப்பிங் படமாக வெளியாகிறது.
