Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Life

காதலும், புரிதலும் இருந்துவிட்டால் வாழ்க்கை எவ்வளவு அழகாக இருக்கும் !!

July 28, 2017
in Life
0

நமக்கு முதல் நாள் இருந்த காதல் உணர்வும் புரிதலும் வாழ்நாள் முழுவதும் அதே போன்று நீடிப்பதில்லை. சற்றே சிந்தித்து பாருங்கள், முதல் நாள் இருந்த அதே காதலும், புரிதலும், விட்டுக்கொடுத்துப்போகும் குணமும் வாழ்நாள் முழுவதும் அப்படியே இருந்துவிட்டால் வாழ்க்கை எவ்வளவு அழகாக இருக்கும் என்று..! ஏன் காதல் நாட்கள் செல்ல செல்ல வெறுப்புடன் பார்க்கப்படும் ஒரு விஷயமாகிறது? அதற்கு என்ன தான் காரணமாக இருக்க முடியும் என்பதை இந்த பகுதியில் காணலாம்.

காதலின் ஆராம்பத்தில் நீங்கள் நிறைய தடவை ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ ‘நீ மட்டும் தான் என் உலகம்’ போன்ற ஆசை வார்த்தைகளை கூறி இருப்பீர்கள். இது இயல்பு தான். ஆனால் நம்மில் எத்தனை பேர் காதலில் இரண்டு வருடத்தை கடந்த பிறகும் கூட நிலையாக அதே மனநிலையில் இருக்கிறோம்? சொல்லும் வார்த்தைகள் மனதை மகிழ்விக்கும் என்றாலும், சொல்லிய வார்த்தையில் உள்ள உண்மையை உங்கள் துணை உணரும் போது காதல் வலுவாகும்.

உங்கள் துணைக்கு நீங்கள் அவரை விட்டுவிட்டு போய்விடுவீர்களோ என்ற பயம் வருவது இயல்பு தான். அவர் அதற்காக செய்யும் சில விஷயங்கள் உங்களை கோபப்படுத்தலாம். ஆனால் அதற்காக நீங்கள் ஆத்திரம் அடையவோ அல்லது அவருக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லையோ என்று நினைக்க கூடாது. அவரது மனதை புரிந்து கொண்டு அவருக்கு உங்கள் மீது முழுநம்பிக்கை வருமாறு நடந்துகொள்ளுங்கள். அவரது பாதுகாப்பின்மையை போக்குவது உங்களது கையில் தான் உள்ளது.

இன்று நாம் சினிமா, சீரியல் என பார்த்து அதே போல இருக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் சினிமாவில் வாழ்க்கையின் முழுமையும் காட்டுவதில்லை. சில நேரம் சந்தோஷமும், சில நேரம் கஷ்டமும் வந்து போவது இயல்பு தான். காதலை பொருத்தவரை இதனை பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது. நீங்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அதிகமாக காயப்பட்டுள்ளீர்களா? இனி இவருடன் வாழவே முடியாது என்ற நிலையில் பிரிவை பற்றி பரஸ்பரமாக பேசி முடிவெடுக்கலாம்.

சிலர் காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டு தனது அத்தனை சந்தோஷங்களையும் விட்டுவிட்டு தனது வாழ்க்கையையே தன் துணையின் காலடியில் வைத்துவிட்டு, கொஞ்ச காலம் கழித்து, காதல் போதை தெளிந்ததும், வாழ்க்கையே உன்னால தான் போச்சுனு ஒரு வார்த்தையை சொல்லிவிடுவார்கள். எனவே நீங்கள் உங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் சற்று நேரம் ஒதுக்க வேண்டியது அவசியம். இதனால் இருவரும் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்.

எந்த ஒரு விஷயத்திலும் இது உன்னால் தான் நடந்தது. நீ தான் காரணம் என பழைய புராணங்களை எல்லா சண்டைகளிலும் பாடுவதை தயவு செய்து நிறுத்துங்கள். இவை வாழ்க்கைக்கு சற்றும் உதவாது. உங்கள் துணையின் மனதை காயப்படுத்துவது உங்கள் தேவையா? அல்லது அவருடன் மகிழ்ச்சியாக வாழ்வது உங்கள் நோக்கமா என்பது உங்கள் கையில் தான் உள்ளது.

ஒவ்வொரு உறவும் கண்ணாடியை போன்றது தான். நீங்கள் அன்பை காட்டினால் அன்பை காட்டுவார்கள். வெறுப்பை காட்டினால் அவர்களும் வெறுப்பை தான் காட்டுவார்கள். நீங்கள் வெறுப்பை காட்டினாலும் உங்கள் துணை அன்பை தான் காட்ட வேண்டும் என நினைக்காதீர்கள். முதலில் உங்கள் பக்கம் உள்ள தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.

ஒரே வீட்டில் இருந்தாலும், இரு மனமும் இணையாமல் வெவ்வேறு பாதையில் சென்றால் பயனில்லை. நீங்கள் உங்களது துணையிடம் உங்கள் மனதில் உள்ள அனைத்தையும் தாராளமாக பேசுங்கள். அவரது வார்த்தைக்கும் மதிப்பளிக்க வேண்டியது அவசியம்.

Previous Post

கணவரை கொன்று நாடகமாடிய பெண் கைது

Next Post

ஆண்மையை அதிகரிக்கச் செய்ய வேர்கடலை!!

Next Post
ஆண்மையை அதிகரிக்கச் செய்ய வேர்கடலை!!

ஆண்மையை அதிகரிக்கச் செய்ய வேர்கடலை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை – கல்வி அமைச்சின் அறிவிப்பு

June 1, 2026
19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்தது

June 1, 2026
ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026

Recent News

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை – கல்வி அமைச்சின் அறிவிப்பு

June 1, 2026
19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்தது

June 1, 2026
ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures