Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Politics

அர­சாங்கம் மேற்­கொள்ளும் முறை­யற்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக சம்பந்தன் அழுத்தம் கொடுக்க வேண்டும்

July 13, 2017
in Politics
0
அர­சாங்கம் மேற்­கொள்ளும் முறை­யற்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக  சம்பந்தன்  அழுத்தம் கொடுக்க வேண்டும்

எதிர்க்­கட்சித் தலை வர் இரா.சம்­பந்தன் நாட் டில் இடம்­பெறும் அசா­தா­ரண நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக குரல் கொடுக்­காது அமை­தி­யாக உள்ளார். எனினும் அவர் அமைதி கலைத்து அர­சாங் கம் மேற்­கொள்ளும் முறை­யற்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக அழுத்தம் கொடுக்க வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன தெரி­வித்தார்.

கூட்டு எதி­ரட்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பொர­ளை­யி­லுள்ள என்.எம்.பெரேரா நிலை­யத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­டி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

அர­சாங்கம் நாட்­டுக்குப் பாதகம் ஏற்­ப­டுத்தும் பல்­வேறு சட்­ட­மூ­லங்­களை நிறை­வேற்­றிக்­கொள்ள முனை­கி­றது. எனினும் அவற்றை முறை­யற்ற வகை­யி­லேயே நிறை­வேற்­றிக்­கொள்­வ­தற்கு எத்­த­ணிப்­ப­தையே அண்­மைக்­கா­லங்­களில் அவ­தா­னிக்க முடிந்­தது.

அத்­துடன் நாட்டில் முப்­பது வரு­டங்கள் இடம்­பெற்ற யுத்­தத்தை வெற்­றி­கொண்ட இரா­ணு­வத்­தையும் அர­சியல் தலை­வர்­க­ளையும் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்தும் வேலைத்­திட்­டத்­திற்கு அரசாங்ம் வழி­கோ­லு­கி­றது. இவ்­வா­றான நட­வ­டிக்­கை­யினை வேறு எந்த நாடு­க­ளிலும் காண­மு­டி­யா­துள்­ளது. அமெ­ரிக்க ஜனா­தி­பதி மற்றும் இங்­கி­லாந்தின் பிர­தமர் தமது நாட்டு இரா­ணு­வத்­தினர் தவ­று­செய்­கின்ற போதிலும் அது தொடர்பில் வேறு தரப்­பினர் விசா­ரணை நடத்­த­து­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை எனக் குறிப்­பிட்­டுள்­ளனர்.

இதே­வேளை காணா­ம­லாக்­கப்­ப­டு­த­லி­லி­ருந்து ஆட்­களைப் பாது­காப்­ப­தற்­கான சர்­வ­தேச சம­வாய சட்­ட­மூலம் பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் அச்­சட்­ட­மூலம் விவா­தத்­திற்கு எடுக்­காது காலம் தாழ்த்­தப்­பட்­டுள்­ளது. அச்­சட்­ட­மூலம் நாட்டின் பாது­காப்­புக்கும் ஒற்­றை­யாட்­சிக்கும் பாத­க­மாக அமை­ய­வுள்­ளது.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பத­விக்­காலம் நிறை­வ­டைந்து இரு வரு­டங்கள் கடந்­துள்ள போதிலும் இன்னும் தேர்தல் நடத்­தப்­ப­ட­வில்லை. மேலும் கிழக்கு, வட­மத்­திய மற்றும் ஊவா மாகா­ண­ச­பை­களின் பத­விக்­காலம் விரைவில் நிறை­வ­டை­வுள்­ளது.

எனினும் அத்­தேர்­த­லையும் நடத்­தாது காலம் தாழ்த்­து­வ­தற்கு அர­சாங்கம் முற்­ப­டலாம். அவ்­வாறு செய்­யு­மாக இருந்தால் அதற்­கெ­தி­ராக நாம் கடு­மை­யான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வரும்.

ஆகவே உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சித் தலைவராகச் செயற்படும் இரா.சம்பந்தன் அமைதியாக இருக்காது அது தொடர்பில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Previous Post

நாடளாவிய ரீதியில் நான்கு மணி நேர பொலிஸ் நடவடிக்கை

Next Post

நல்லாட்சி அரசாங்கம் வடகிழக்கு மக்களின் தேவைகளை நிறைவேற்ற தொடர்ந்து முன்னிற்கும்

Next Post
நல்லாட்சி அரசாங்கம் வடகிழக்கு மக்களின் தேவைகளை நிறைவேற்ற தொடர்ந்து முன்னிற்கும்

நல்லாட்சி அரசாங்கம் வடகிழக்கு மக்களின் தேவைகளை நிறைவேற்ற தொடர்ந்து முன்னிற்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures