Wednesday, June 4, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sports

618 விக்கெட்கள் வீழ்த்தினாலே ஓய்வு பெற்று விடுவேன்: மனம் திறக்கிறார் அஸ்வின்

October 22, 2017
in Sports
0
618 விக்கெட்கள் வீழ்த்தினாலே ஓய்வு பெற்று விடுவேன்: மனம் திறக்கிறார் அஸ்வின்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அனில் கும்ப்ளே வீழ்த்திய 619 விக்கெட்கள் சாதனையை நெருங்கினாலே சிறப்பான விஷயம். 618 விக்கெட்களை நான் கைப்பற்றினால் அதுவே எனது கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக விளங்கும் சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு, சமீப காலமாக ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் மறுக்கப்பட்டு வருகிறது. இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடரில் இடம் பெறாத அவர், தற்போது நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அஸ்வின் கூறியிருப்பதாவது:

ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இருந்து நான் நீக்கப்பட்டுள்ளேனா அல்லது எனக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து எனக்கு தெரியாது. அதுகுறித்து கருத்து தெரிவிக்கும் இடத்தில் நான் இல்லை. அணி விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் எனக்கு கிடையாது.

என்னை பொறுத்தவரையில் ஒவ்வொரு போட்டியிலும் முன்னேறுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளேன். எனக்கான வாய்ப்பு கிடைத்தால் அதில் நிச்சயம் சிறப்பாக செயல்படுவேன். இதுவரை நான் செயல்பட்டதைவிட கூடுதலாக கவனம் செலுத்தி எனது திறமையை வளர்த்துக் கொள்வேன். என்னால் அதை மட்டும்தான் சிறப்பாகச் செய்ய முடியும். மற்ற படி அணி விவகாரங்களில் நான் எதுவும் செய்ய முடியாது.

நான், அனில் கும்ப்ளேவின் தீவிர ரசிகன். கும்ப்ளே டெஸ்ட் கிரிக்கெட்டில் 619 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். நான் 618 விக்கெட்களை வீழ்த்தினாலே பெருமையாக கருதுவேன். அதுவே எனது கடைசி போட்டியாக அமைந்துவிடும். இலங்கை அணியின் ரங்கனா ஹெராத்தும் எனக்கு முன் மாதிரியாக விளங்கக்கூடிய வீரர்களில் ஒருவர். அவர் ஒரு அற்புதமான பந்து வீச்சாளர் என்றே கருதுகிறேன்.

வயது ஒரு தடையில்லை என்பதை அவர் நிருபித்துள்ளார். ஒவ்வொரு நாளும் தனது திறனை மேம்படுத்தி வருகிறார். அவர் ஒரு சாம்பியன் பந்து வீச்சாளர் என்பதை தனது ஆட்டத் திறனால் நிருபித்து வருகிறார். நெருக்கடிகளை தனது முன்னேற்றத்துக்காக சிறந்த முறையில் பயன்டுத்தக் கூடியவர். பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இதைத்தான் அவர் செய்தார்.

Previous Post

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இந்தியா

Next Post

மங்கோலியாவில் தங்கம் வென்ற தமிழகத்தின் அர்னால்டு..!

Next Post
மங்கோலியாவில் தங்கம் வென்ற தமிழகத்தின் அர்னால்டு..!

மங்கோலியாவில் தங்கம் வென்ற தமிழகத்தின் அர்னால்டு..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தனுஷ் நடிக்கும் ‘குபேரா ‘படத்தின் புதிய பாடல் வெளியீடு

ரெபல் ஸ்டார் ‘ பிரபாஸ் நடிக்கும் ‘ தி ராஜா சாப்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

June 3, 2025
வடக்கில் காணி உரிமைகளை மீளவும் மக்களுக்கு வழங்குக | JVP

 ‘ஆனையிறவு உப்பு’ என்ற நாமத்தை வழங்க தீர்மானம் ; சுனில் ஹந்துனெத்தி

June 3, 2025
அதிபர் – ஆசிரியர்களுக்காக 64 பில்லியனை வழங்க முடியாதா? | ஜே.வி.பி. கேள்வி

தற்காலிகமாக ஏற்பட்ட அலையில் ஆட்சிக்கு வந்தவர்கள் நீங்கள் | ரோஹன பண்டார

June 3, 2025
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

ஒரு வருடம் கழித்து கட்டுநாயக்கவில் சிக்கிய கொலையாளி!

June 3, 2025

Recent News

தனுஷ் நடிக்கும் ‘குபேரா ‘படத்தின் புதிய பாடல் வெளியீடு

ரெபல் ஸ்டார் ‘ பிரபாஸ் நடிக்கும் ‘ தி ராஜா சாப்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

June 3, 2025
வடக்கில் காணி உரிமைகளை மீளவும் மக்களுக்கு வழங்குக | JVP

 ‘ஆனையிறவு உப்பு’ என்ற நாமத்தை வழங்க தீர்மானம் ; சுனில் ஹந்துனெத்தி

June 3, 2025
அதிபர் – ஆசிரியர்களுக்காக 64 பில்லியனை வழங்க முடியாதா? | ஜே.வி.பி. கேள்வி

தற்காலிகமாக ஏற்பட்ட அலையில் ஆட்சிக்கு வந்தவர்கள் நீங்கள் | ரோஹன பண்டார

June 3, 2025
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

ஒரு வருடம் கழித்து கட்டுநாயக்கவில் சிக்கிய கொலையாளி!

June 3, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures