Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை

June 7, 2021
in Sri Lanka News
0

வவுனியா கனகராயன்குளம் வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை நிலவுவதாக வவுனியா வடக்கு பிரதேசசபையின் தலைவர் எஸ். தணிகாசலம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கனகராயன்குளத்தில் வாழும் மக்களின் நலன்கருதி கிராமிய வைத்தியசாலையொன்றை அமைக்குமாறு பல்வேறு தரப்பினர் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் குறித்த வைத்தியசாலை அமைக்கப்பட்டபோதிலும் அதனை திறப்பதில் காலதாமதமாகி அண்மையில் திறக்கப்பட்டது.

எனினும் வைத்தியர் ஒருவருடன் உதவியாளர் நியமிக்கப்பட்ட போதிலும் குறித்த வைத்தியசாலைக்கு அதிகளவான நோயாளர்கள் வருகின்றமையால் வைத்தியசாலையை இயக்குவதற்கு ஆளணி போடப்பட வேண்டிய தேவை உள்ளது. ஆளணி நிரப்பப்படும் பட்சத்தில் நோயாளர்கள் சிரமமின்றி தமது நோய்க்காக மருந்தினை பெறுவதுடன் நேர விரயமும் ஏற்படாது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பிடம் முறையிட்டும் இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

Previous Post

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் அரிதாகவே காணப்படுகிறது

Next Post

1000 தொற்றாளர்களை எட்டியது வவுனியா

Next Post

1000 தொற்றாளர்களை எட்டியது வவுனியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures