Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

வலிமையான இந்தியா உருவாக சபதமேற்போம்: ஸ்டாலின்

October 2, 2017
in World
0
வலிமையான இந்தியா உருவாக சபதமேற்போம்: ஸ்டாலின்

மகாத்மா காந்தி பிறந்த நாளில் வலிமையான இந்தியா உருவாக சபதம் ஏற்போம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தனது முகநூல் பக்கத்தில் ஸ்டாலின் கூறுகையில், ”தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 148-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மகாத்மா கனவு கண்டபடி, நள்ளிரவிலும் தன்னந்தனியாக பெண்கள் நடந்து செல்லும் சுதந்திரமும், வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்கும் இந்தியாவும் என்றென்றும் முன்னேற்றப் பாதையில் பீடுநடைப் போடவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

மதசார்பற்ற தன்மையும், கிராம ராஜ்யமும் பூத்துக் குலுங்கும் இந்தியாதான் மகாத்மா கண்ட கனவு என்பதை மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். வலிமைமிக்க, பொருளாதாரத்தில் ஆளுமை பெறும் இந்தியா உருவாக மகாத்மா காந்தி பிறந்த இந்த நன்னாளில் அனைவரும் சபதம் ஏற்போம்” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

Previous Post

easy24news.com இன் இனிய இசை விருந்து

Next Post

குடும்பத்தகராறு காரணமாக 2 குழந்தைகளை கொலை செய்த தாய்

Next Post
குடும்பத்தகராறு காரணமாக 2 குழந்தைகளை கொலை செய்த தாய்

குடும்பத்தகராறு காரணமாக 2 குழந்தைகளை கொலை செய்த தாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures