Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

பூமி மீது மோத வரும் சீனாவின் விண்வெளி நிலையம்

October 16, 2017
in World
0

சீனாவின், ‘தியாங்யாங் – 1’ விண்வெளி ஆய்வு நிலையம் இன்னும் சில மாதங்களில் பூமி மீது மோத உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

8.5 டன் எடை கொண்டது
விண்வெளி ஆய்வுக்காக, சீனாவால் கடந்த 2011ம் ஆண்டு அக்.,1ம் தேதி, ‘தியாங்யாங் – 1’ விண்வெளி ஆய்வு நிலையம், கோபி பாலைவனத்தில் இருந்து, ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. அதன் மூலம் பல ஆய்வுகள் நடத்தப்பட்டன. கடந்த, 2016ல் ஐ.நா.,விடம், ‘அந்த விண்வெளி ஆய்வு நிலையம் தரை கட்டுப்பாட்டை விட்டு சென்று விட்டது. எனவே, 2017 ம் ஆண்டு இறுதியில் அல்லது, 2018 ம் ஆண்டு துவக்கத்தில், பூமி மீது மோதும்’ என, சீன அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, 8.5 டன் எடை கொண்ட விண்வெளி நிலையம் இன்னும் சில மாதங்களில் பூமி மீது மோத உள்ளது. மொத்தமாக இல்லாமல், காற்று மண்டலத்தை மீறி உள்ளே நுழையும் போது உராய்வினால் எரிந்து போய் சிறு சிறு துண்டுகளாக தான் பூமி மீது விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அந்த துண்டுகள், 100 கிலோவிற்கு மேல் எடை கொண்டதாக இருக்கும் போது, பூமி மீது மோதினால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால், இதை சீனா மறுத்துள்ளது. மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என தெரிவித்துள்ளது.
இதற்கு முன் விழுந்தவை

இதற்கு முன், ரஷ்யாவின், 20 டன் எடை கொண்ட ,’சல்யூட் – 7′ விண்வெளி நிலையமும், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின், 77 டன் எடை கொண்ட, ‘ஸ்கைலேப்’ விண்வெளி நிலையமும் கட்டுப்பாட்டை இழந்து பூமி மீது விழுந்துள்ளன.
சீனா கடந்த, 2016 செப்., 15ம் தேதி, ‘தியாங்யாங் – 2’ என்ற விண்வெளி ஆய்வு நிலையத்தை விண்ணில் செலுத்தியது. அது தற்போது செயல்பாட்டில் உள்ளது.

Previous Post

பேய்கள் வந்துவிடும் என்பதற்காக தமிழர்கள் தொடர்ந்தும் துன்பங்களைச் சுமக்கமுடியாது!

Next Post

சோமாலியா வெடிகுண்டு தாக்குதல்: பலி 276 ஆனது

Next Post
சோமாலியா வெடிகுண்டு தாக்குதல்: பலி 276 ஆனது

சோமாலியா வெடிகுண்டு தாக்குதல்: பலி 276 ஆனது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures