Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பிர்ஸா முண்டாவின் கதையை படமாக்கும் அறம் இயக்குநர்

October 10, 2018
in Cinema
0

நயன்தாரா நடித்த அறம் படத்தின் மூலம் கவனிக்கத்தக்க இயக்குநராக மாறியவர் கோபி நயினார். தற்போது ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். சமூக அக்கறை கொண்ட கதையில் இப்படம் தயாராகி வருகிறது.

இந்த படத்திற்கு இடையே மற்றுமொரு கதையையும் தயார் செய்து வருகிறார் கோபி. வட இந்தியாவைச் சேர்ந்த பிர்ஸா முண்டாவின் வாழ்க்கையை படமாக்குகிறார். 25 வயது வரை மட்டுமே வாழ்ந்த பிர்ஸா, ஆங்கிலேயர்களை விரட்ட புரட்சியை செய்தவர். மேலும் பழங்குடி இன மக்களுக்காக போராடி உயிர் நீத்தவர்.

இதுப்பற்றி கோபி நயினார் கூறுகையில், “பிர்சா முண்டா வடக்கு பகுதியில் நன்கு அறியப்பட்ட நபர். ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் அவர்களுக்கு எதிராக பல செயல்களில் ஈடுபட்டவர். இவரின் கதையை படமாக்குகிறேன். இதற்கான கதையை எழுதி முடித்துவிட்டேன். இதற்காக 2 ஆண்டுகள் பல்வேறு ஆவணங்களை திரட்டி உருவாக்கி உள்ளேன். பெரிய பட்ஜெட்டில் படமாக தயாராகிறது. முன்னணி நடிகர் ஒருவரை நடிக்க வைக்க பேசி வருகிறோம். ஜெய் படத்தை முடித்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும்” என்றார்.

Previous Post

இரட்டை வேடங்களில் நயன்தாராவின் ஐரா

Next Post

இன்ஸ்டாகிராமிலும் நுழைந்த தனுஷ்

Next Post

இன்ஸ்டாகிராமிலும் நுழைந்த தனுஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures