Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளுக்கு தடை: அருணாச்சல், அந்தமானுக்கு விலக்கு

July 13, 2017
in World
0
நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளுக்கு தடை: அருணாச்சல், அந்தமானுக்கு விலக்கு

நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் செயல்படும் மதுக்கடைகளைக் கடந்த ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து மூடுமாறு உச்ச நீதிமன்றம் மார்ச் 31-ல் உத்தரவிட்டது.

எனினும், சிக்கிம், மேகாலயா, இமாச்சல் ஆகிய மலைப் பகுதிகள் நிறைந்த மாநிலங்கள் மற்றும் 20 ஆயிரம் மக்கள் தொகைக்கும் குறைவாக உள்ள பகுதிகளுக்கு விலக்கு அளித்தது.

இந்நிலையில், அருணாச்சல பிரதேசம், உத்தராகண்ட், கேரளா ஆகிய மாநில அரசுகள் மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகள் நிர்வாகமும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன. அதில், தங்களுக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தன.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அருணாச்சல பிரதேசம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, “எங்கள் மாநிலத்திலும் மலைப் பகுதிகள் அதிகமாக உள்ளன. மாநிலத்தின் மொத்த வருவாயான ரூ.441.61 கோடியில் மது விற்பனை மூலம் மட்டும் ரூ.210 கோடி கிடைக்கிறது. குறிப்பாக, உச்ச நீதிமன்ற உத்தரவால் வருவாய் ஆதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

அந்தமான் நிக்கோபர் தீவுகள் சார்பிலும் இதே கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள் கூறும்போது, “அருணாச் சல பிரதேச மாநிலத்தின் வருவா யின் சுமார் 50 சதவீதம் மது விற் பனை மூலம் கிடைப்பதாக அரசு தெரிவித்துள்ளது. எனவே நெடுஞ் சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் மதுக்கடைகளை மூடுமாறு பிறப்பித்த உத்தரவி லிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கும் இந்த விலக்கு அளிக்கப்படுகிறது” என்றனர்.

எனினும், உத்தராகண்ட் மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறி ஞர், நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகளை மூடியதால் ஏற் படும் வருவாய் இழப்பு தொடர்பான விவரங்களைச் சமர்ப்பிக்கவில்லை. இதையடுத்து, முழு விவரத்தை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தனர். கேரளா மனு மீதான விசாரணையும் ஒத்திவைக்கப்பட்டது.

Previous Post

அப்துல் கலாம் அருங்காட்சியகம் இன்று திறப்பு

Next Post

பிஹார் அரசில் இருந்து லாலு கட்சி விலகினால் நிதிஷ் குமார் ஆட்சியை காப்பாற்ற பாஜக தூது?

Next Post

பிஹார் அரசில் இருந்து லாலு கட்சி விலகினால் நிதிஷ் குமார் ஆட்சியை காப்பாற்ற பாஜக தூது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures