Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தெலுங்கில் ஒரே சமயத்தில் உருவாகும் இரண்டு ‘பயோபிக்’

May 29, 2018
in Cinema
0

இந்தியத் திரையுலகில் அரசியல் தலைவர்கள் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் வருவது குறைவுதான். தெலுங்கில் வெளிவந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மகாநதி’ படம் வெளிவருவதற்கு முன்பே இரண்டு ‘பயோபிக்’ படங்கள் அறிவிக்கப்பட்டன. இரண்டு படங்களுமே அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்.

ஒருவர் என்டிஆர், மற்றொருவர் ஒய்எஸ்ஆர். என்டிஆர் வாழ்க்கை வரலாற்றுப் படம் அவர் சினிமா நடிகர் ஆக ஆனது, பின்னர் அரசியல்வாதி ஆனது என அனைத்து விஷயங்களையும் அடங்கிய படமாக உருவாக உள்ளதாம். இப்படத்திற்கு ‘என்டிஆர்’ என்றே பெயர் வைத்திருக்கிறார்கள்.

ஒய்எஸ்ஆர் என அழைக்கப்படும் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி ஆந்திரா முதல்வராக இருந்து ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர். அவருடைய அரசியல் வாழ்க்கையில் முக்கியத் திருப்பத்தைக் கொடுத்தது அவருடைய யாத்திரைப் பயணம். அதனால், இந்தப் படத்திற்கு ‘யாத்ரா’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

இந்த இரண்டு படங்களுமே விரைவில் ஆரம்பமாக உள்ளன. இரண்டு படங்களையும் அடுத்த வருட சங்கராந்தி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். ‘மகாநதி’ படம் போன்று இந்த இரண்டு படங்களுக்கும் வரவேற்பு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Previous Post

ஹேசல்வுட் விலகல்

Next Post

ஆட்சி செய்ய ஆரம்பியுங்கள் : பிரகாஷ் ராஜ் கிண்டல்

Next Post
ஆட்சி செய்ய ஆரம்பியுங்கள் : பிரகாஷ் ராஜ் கிண்டல்

ஆட்சி செய்ய ஆரம்பியுங்கள் : பிரகாஷ் ராஜ் கிண்டல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures