Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சாதியக் கட்டமைப்பை உடைக்க, மாணவர்களை அரசியல் படுத்த வேண்டும் – பா ரஞ்சித்

November 13, 2017
in Cinema
0
சாதியக் கட்டமைப்பை உடைக்க, மாணவர்களை அரசியல் படுத்த வேண்டும் – பா ரஞ்சித்

சாதியக் கட்டமைப்பை உடைக்க, மாணவர்களை அரசியல் படுத்த வேண்டும் என்று இயக்குநர் பா ரஞ்சித் கூறினார். நீலம் பண்பாட்டு மையம் சார்பில் “கல்வி முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளல்” (Challenges In Education – Way Forward) என்ற தேசிய கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இந்தியா முழுவதிலும் இருந்து பல கல்வியாளர்கள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், மாணவர் அமைப்பினர் கலந்து கொண்டு இந்த கருத்தரங்கில் உரையாற்றினர். இந்த கருத்தரங்கை ஒருங்கிணைத்திருந்த இயக்குநர் பா.ரஞ்சித் பேசியதாவது: இன்று தமிழகத்தின் மிக முக்கியமான தேவையாக இந்த நிகழ்வு. ஏனென்றால் இந்த சமூக நீதியற்ற, சமத்துவமற்ற கல்விச் சூழலில் ப்ரின்ஸ் கஜேந்திர பாபு, ஆதவன் தீட்சண்யா போன்ற சமூக ஆர்வலர்கள் நமக்குத் தேவை என்று நான் நினைக்கிறேன். இவர்கள் எல்லோரும்தான் நமக்கு ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு என் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழர் வசந்தி தேவி பேசும்போது, இங்கு கல்வியே சமம் இல்லாமல் இருக்கிறது. அதை நாம் சரி செய்யாமல் நீட் மாதிரியான எந்த ஒரு பொதுத் தேர்வு வந்தாலும், அது யாருக்கு அனுகூலமாக இருக்கும் என்பதை மிகத் தெளிவாக நமக்கு புரிய வைத்தார். முன்னெல்லாம் கல்வி கற்கவில்லை என்பது பிரச்சனையாக இருந்தது. இப்போது கல்வி கற்பது தான் பிரச்சினையாக இருக்கிறது. உதாரணத்திற்கு சட்டக்கல்லூரி மாதிரியான கல்லூரிகளில் ஒடுக்கப்பட்டவர்கள் அதிகம் படிக்கிறார்கள் என்பதால் அங்கு கட் ஆப் மார்க் அதிகமாக இருக்கும். இவர்கள் அடிமைப்பட்டு கிடந்த வடிவத்தையும் வெறுக்கிறார்கள், எழுச்சி பெறும் வடிவத்தையும் வெறுக்கிறார்கள்.

அரசியல்படுத்த வேண்டும் பொதுவாக இன்றைக்கு கல்வி நிலையங்கள் என்னவாக இருக்கின்றன என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இட ஒதுக்கீடு பெற்று படிக்கிறார்கள் என்று இங்கு கேலிக்குள்ளாக்கும் நேரத்தில்தான், மெரிட்டில் தேர்வாகும் மாணவர்களும் கொலைக்கு ஆளாகிறார்கள். ரோகித் வெமூலா, முத்துகிருஷ்ணன் முதல் கலைக்கல்லூரி மாணவன் பிரகாஷ் வரை கல்வி நிலையங்களில் நிலவும் சாதிய அரசியலால் மட்டுமே சாகடிக்கப்பட்டிருக்கிறார்கள். சாதியக் கட்டமைப்பை உடைக்க, மாணவர்களை அரசியல் படுத்த வேண்டும்.

தொடர்ந்து இட ஒதுக்கீடு குறித்த தவறான பிரச்சாரம் இங்கு மேற்கொள்ளப்படுகிறது. யார் யாருக்கு எவ்வளவு சதவீத இட ஒதுக்கீடு என்பதை முதலில் பொதுத்தளத்தில் விவாதத்திற்குள்ளாக்க வேண்டும். அப்போது தான் இட ஒதுக்கீடு என்பது எல்லோருக்குமானது என்ற புரிதலை நாம் ஏற்படுத்த முடியும். கல்வி சார்ந்த எழுச்சி என்பது நம் சமூகத்தில் நடைபெறவே இல்லை. தொடர்ந்து கல்வி நிலையங்கள் சமூகத்திற்கு தேவையான அரசியலை ஒதுக்கி வைத்து விட்டு, மாணவர்களை வேலை செய்யும் இயந்திரங்களாக உற்பத்தி செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன.

இணைந்து எதிர்ப்பு நீட் என்பது ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் மட்டுமே சந்திக்கப் போகிற பிரச்சினை இல்லை. நீட் ஒட்டுமொத்த மாணவர்களுக்கான பிரச்சினை. எனவே தான் நீட் தேர்வை எல்லோரும் இணைந்தே எதிர்த்தாக வேண்டிய மிக முக்கியமான தேவை இருக்கிறது.

Previous Post

விஜய் அரசியலுக்கு வருவாரா என எனக்கு தெரியாது.. அவர் நல்ல நடிகர்!

Next Post

த்ரில்லர், ஹாரரை விட்டுவிட்டு மெஸேஜ் பக்கம் தாவிய ஹீரோயின்கள்!

Next Post
த்ரில்லர், ஹாரரை விட்டுவிட்டு மெஸேஜ் பக்கம் தாவிய ஹீரோயின்கள்!

த்ரில்லர், ஹாரரை விட்டுவிட்டு மெஸேஜ் பக்கம் தாவிய ஹீரோயின்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures