Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Politics

கீரிமலை ஜனாதிபதி மாளிகை; வெளியாருக்கு வழங்க தீர்மானம்

June 9, 2021
in Politics, Sri Lanka News
0

யாழ்ப்பாணம், கீரிமலையில் மக்களின் நிலத்தில் அடாத்தாக அமைக்கக்பட்ட ஜனாதிபதி மாளிகை கூறுவிலை கோரல் மூலம் வெளியாருக்கு வழங்கப்படவுள்ளது.

வலிகாமம் வடக்கின் பெரும் பகுதி படையினரின் ஆக்கிரமிப்பில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இருந்த வேளை மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தின்போது கீரமலையில் ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டது. இவ்வாறு அமைக்கப்பட்ட பகுதி முழுமையாக மறைக்கப்பட்டும் காணப்பட்டது.

இதன் பின்பு மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தம் காரணமாக பல நிலங்கள் விடுவித்தமையின் காரணமாக கீரிமலை ஜனாதிபதி மாளிகைக்கு ஒரு கிலோ மீற்றர் தூரம் வரையில் விடுவிக்கப்பட்டதால் இந்த இடம் தொடர்ந்தும் கடற்படையினரின் பராமரிப்பிலேயே உள்ளது.

இதேநேரம் இந்த மாளிகையை வடக்கு மாகாண சபை பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரில் அழைத்துச் சென்று கோரிக்கை விடுத்தபோது விக்னேஸ்வரன் மறுத்துவிட்டார்.

இதனால் தொடர்ந்தும் கடற்படையினரின் பிடியில் உள்ள இந்த மாளிகையை சர்வதேச விருந்தினருக்கான சந்திப்பு நிலையம் என்னும் பெயரில் இலங்கை முதலீட்டு சபை ஏலத்தில் வழங்கவுள்ளது.

ஜே/226 நகுலேஸ்வரம் கிராம சேவகர் பிரிவில் 50 ஏக்கர் நிலம் கடற்படையினர் வசம் உள்ள போதும் 7 ஏக்கர் நிலத்தில் 5 மாடிக் கட்டடத்தில் குறித்த மாளிகை அமைந்துள்ளது.

Previous Post

விதிகளை மீறிய 1,034 பேர் கைது

Next Post

இடியுடன் கூடிய மழை

Next Post

இடியுடன் கூடிய மழை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures