Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன்!

July 19, 2017
in World
0
கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன்!

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் நேரில் ஆஜராக கார்த்தி சிதம்பரத்திற்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ப.சிதம்பரம் நிதி அமைச்சராக பதவி வகித்தபோது, 2007-08ம் ஆண்டில் வெளிநாடு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலம், ஐஎன்எக்ஸ் மீடியா குழுமத்திற்கு ஒப்புதல் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு இது என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒப்புதல் வழங்கியதற்கு பரிசாக கார்த்தி சிதம்பரத்திற்கு, மேற்சொன்ன மீடியா குழுமம், ரூ.90 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தியிருந்தது. இந்த நிலையில் வரும் 21ம் தேதி டெல்லியிலுள்ள சிபிஐ தலைமையகத்தில், அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் காரத்தி சிதம்பரத்திற்கு நெருக்கமானவர்களுக்கு ஏற்கனவே சிபிஐ சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஒஸ்டின் பெர்னாண்டோ தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவராக நியமனம்

Next Post

ஆங்கில பத்திரிகையை பார்க்க கமல் ஏன் சொன்னார் தெரியுமா?

Next Post

ஆங்கில பத்திரிகையை பார்க்க கமல் ஏன் சொன்னார் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures