Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

இன்றைய இசையமைப்பாளர்கள் யாரும் ஆச்சர்யப்பட வைக்கவில்லை : இளையராஜா

December 1, 2018
in Cinema
0

சென்னையில் கல்லூரி ஒன்றில் நடந்த பராம்பரிய தினம் கொண்டாட்டத்தில் இளையராஜா பங்கேற்றார். அப்போது மாணவிகள் முன்னிலையில் இசையமைத்தும், தன் இசை பயணம் குறித்தும் பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது :

சென்னைக்கு நான் வரும் போது கையில் காசு கிடையாது. காசு இல்லாமல் சென்னைக்குப் போய் என்னப்பா பண்ணுவ என்று அம்மா கேட்டார். ஏதாவது லைட் மியூசிக்கில் வாசித்து சம்பாதிப்பேன் என்றேன். அதில் எதுவும் கிடைக்கவில்லை என்றால் எனக் கேட்டார். பிளாட்பார்மில் உட்கார்ந்து வாசிப்பேன் என்றேன்.

நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்கள். முதலில் உங்களை நீங்கள் நம்புங்கள். எதையும் எதிர்பார்க்காதீர்கள், எது அமைகிறதோ, அதை ஏற்றுக் கொள்ளுங்கள். நான் படித்த படிப்பே என்னுடைய வாழ்க்கை மட்டுமே.

1974-ல் சினிமாவில் உதவி இசையமைப்பாளராக பணிபுரிந்து வந்தேன். கடவுள் நம்பிக்கையே இல்லாத நான், மூகாம்பிக்கை கோயிலுக்குள் முதல் அடி எடுத்து வைத்தேன். என் நெஞ்சில் ஒரு மின்னல் தாக்குதல். கடவுள் இல்லையென்றால் நம்முள் என்னது இது என்று எண்ணினேன். இது என்ன, என்ன என்று கோயிலைச் சுற்றி வருவதற்குள் தாய் மூகாம்பிக்கை என்னை ஆட்கொண்டுவிட்டாள்.

என்னுடைய எந்தப் பாடலாக இருந்தாலும் செவியோடு போவது கிடையாது. உள்ளே இறங்கி நெஞ்சை தைக்கும். எனது அனைத்து பாடல்களுமே பக்திப் பாடல்கள் தான். உங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்வு வந்தே தீரும். ஆகையால், மாணவிகளே சிறகடித்து பறங்கள். வானமே எல்லை. நீங்கள் இங்கு படிக்கும் படிப்பும், பார்க்கப் போகும் வேலைக்கும் சம்பந்தமே இருக்கப் போவதில்லை. நான் படிச்ச படிக்கும் செய்யும் வேலைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?

நீங்கள் கேட்பது மாதிரியான பாடல்களை நான் கேட்க முடியாது. நான் ஒரு பாடலைக் கேட்கும் போது, நமக்கு வராத ஐடியா இவனுக்கு வந்துருச்சே என்று ஆச்சர்யப்படணும். அப்படி இதுவரை நடந்ததில்லை. இப்படியொரு பல்லவி நமக்கு வரவில்லையே என்று நான் ஏங்கிய பல்லவிகள் நிறைய இருக்கிறது. அவையெல்லாம் முன்னோர்களுடையது.

வருங்கால இசையமைப்பாளர்கள் கொடுக்கும் பாடல்களில் விஷயம் இருக்க வேண்டும். காற்றடிப்பது, புழுதி பறப்பது போல பாடல்கள் இருந்தால், அவை பாடல்களே அல்ல. ஒரு பாடல் என்பது உங்களை எங்கேயாவது அழைத்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால், எத்தனை ஜென்மமோ இது நமக்கு தொடர்புடையது என்ற எண்ணத்தை உண்டாக்க வேண்டும். அதுவும் இப்போது நடப்பதில்லை. அது உங்களுக்கு நடக்கவில்லை என்றால், பாடலில்லை என்று ஒதுக்கிவிடுங்கள்.

Previous Post

பாலிவுட்டின் அடுத்த காதல் மலாய்கா அரோரா, அர்ஜுன் கபூர் ?

Next Post

சமூக சேவகர் 515 கணேசனுக்கு ரூ.10 லட்சம் செலவில் வீடு கட்டித்தரும் லாரன்ஸ்

Next Post

சமூக சேவகர் 515 கணேசனுக்கு ரூ.10 லட்சம் செலவில் வீடு கட்டித்தரும் லாரன்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures