Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

இடைக்கால அரசின் பிரதமர் அமைச்சரவைக்கும் அரசாங்கத்திற்கும் தலைமை வகிக்க கூடியவராக இருக்க வேண்டும் | சந்திரிகா

April 25, 2022
in Sri Lanka News
0
இடைக்கால அரசின் பிரதமர் அமைச்சரவைக்கும் அரசாங்கத்திற்கும் தலைமை வகிக்க கூடியவராக இருக்க வேண்டும் | சந்திரிகா

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பாராளுமன்றத்தின் நம்பிக்கையை வென்றவராக இருக்க வேண்டும். அதே போன்று அரசாங்கத்திற்கும் அமைச்சரவைக்கும் தலைமை வகிக்கக் கூடியவராகவும் இருக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வினை முன்வைத்து சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பரிந்துரைகளில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பாராளுமன்றத்தின் நம்பிக்கையை வென்றவராக இருக்க வேண்டும். அதே போன்று அரசாங்கத்திற்கும் அமைச்சரவைக்கும் தலைமை வகிக்கக் கூடியவராகவும் இருக்க வேண்டும்.

அரசியலமைப்பின் 42 ஆவது பிரிவின் படி நெருக்கடியான தருணத்தில் ஸ்தாபிக்கப்படும் அமைச்சரவை 12 பேருக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும். இந்த அமைச்சரவை நிறைவேற்றதிகாரத்தை மட்டுப்படுத்தும் வகையில் பிரேரணைகளை கொண்டு வர வேண்டும். இது நாட்டின் எதிர்கால நலன்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும்.

தேசிய கொள்கைகளுக்கான பேரவையின் செயற்பாடுகளை செயற்படுத்த வேண்டும். ஜனநாயக வரையறைக்குள் நாட்டின் எதிர்கால கொள்கை வகுப்பை இந்த பேரவை ஊடாக முன்னெடுக்க வேண்டும்.

அதேபோன்று இந்த பேரவையானது அமைச்சரவை மற்றும் அரச நிறுவனங்களுடன் தொடர்புபட்டு செயற்பட வேண்டும் என்பதோடு, அவ்வாறான தொடர்புகளின் ஊடாக கண்டறியப்படும் விடயங்களை நன்கு ஆராய்ந்து நீண்ட கால கொள்கையை வகுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

கால்பந்தாட்டத்‍தை முன்னேற்ற 30 கோடி ரூபா | பீபாவிடம் முன்வைக்கப்பட்டது செலவு மதிப்பீடு

Next Post

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க எழுத்து மூலம் ஜனாதிபதி உறுதி | அஸ்கிரிய பீடம்

Next Post
இடைக்கால அரசாங்கத்தை அமைக்க எழுத்து மூலம் ஜனாதிபதி உறுதி | அஸ்கிரிய பீடம்

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க எழுத்து மூலம் ஜனாதிபதி உறுதி | அஸ்கிரிய பீடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures