Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அசோக்குமார் தற்கொலை : அன்புசெழியன் தரப்பு மறுப்பு

November 22, 2017
in Cinema
0
அசோக்குமார் தற்கொலை : அன்புசெழியன் தரப்பு மறுப்பு

சசிகுமாரின் உறவினரும், தயாரிப்பாளருமான அசோக் குமார் நேற்று தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு காரணம் பைனான்சியர் அன்புசெழியன் தான் என கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதனால் அன்பு செழியன் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டதால் அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அன்புசெழியன் மீதான குற்றசாட்டை அவரின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் மேலாளர் முரளி மறுத்துள்ளார். இதுகுறித்து கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

அசோக் குமார் தற்கொலைக்கு முன்பு கடிதம் எழுதியதாக கூறப்படுவது உண்மையில்லை. அசோக் குமார், சசிகுமாரின் உதவியாளர். நாங்கள் அசோக் குமார் என்பவரிடம் எந்த பண வரவு செலவும் செய்யவில்லை. சசிகுமார் தான் பணம் பெற்றுள்ளார். எங்களுடன் எந்தவித பண தொடர்பும் செய்யாத அசோக் குமார் எங்களை கடிதத்தில் எழுதி வைத்துள்ளார் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

நாங்கள் கடந்த 20 ஆண்டுகளாக சினிமா தொழில் செய்கிறோம். எங்கும் எங்கள் மேல் எந்த புகாரும் கிடையாது.

இவ்வாறு முரளி கூறியிருக்கிறார்.

Previous Post

அரசியலில் குதிப்பது எப்போது: நடிகர் ரஜினி பேட்டி

Next Post

இனியும் கந்து வட்டி மரணம் தொடரக்கூடாது : பிரகாஷ் ராஜ்

Next Post
இனியும் கந்து வட்டி மரணம் தொடரக்கூடாது : பிரகாஷ் ராஜ்

இனியும் கந்து வட்டி மரணம் தொடரக்கூடாது : பிரகாஷ் ராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures