Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

SLMC 13 சபைகளில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு

February 14, 2018
in News, Politics, Sports
0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 19 மாவட்டங்களில் 185 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அத்துடன் 13 உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைத்துள்ளது. எனினும், புதிய தேர்தல் முறையினால் சபைகளில் தனித்து ஆட்‌சியமைப்பதில் சிக்கல்கள் காணப்படுகின்றன. குறித்த சபைகளில் கூட்டாட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடைபெற்று வருகின்றன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்திலும், ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்திலும், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தராசு சின்னத்திலும், ஜனநாயக ஐக்கிய முன்னணியின் இரட்டை இலை சின்னத்திலும், சுயேட்சைக்குழுவிலும் போட்டியிட்டு இந்த ஆசனங்களை வென்றுள்ளது. இதுதவிர, இன்னும் சில இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் பிரகாரம் பட்டியல் ஊடாக மேலதிக சில ஆசனங்கள் கிடைக்கப்பெறவுள்ளது. இதனால் ஆசனங்களில் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

மாவட்ட ரீதியில் அம்பாறையில் 59 ஆசனங்களையும், திருகோணமலையில் 27 ஆசனங்களையும், மட்டக்களப்பில் 24 ஆசனங்களையும், புத்தளத்தில் 17 ஆசனங்களையும், கண்டியில் 12 ஆசனங்களையும், மன்னாரில் 8 ஆசனங்களையும், குருநாகலில் 7 ஆசனங்களையும், அநுராதபுரத்தில் 5 ஆசனங்களையும், களுத்துறையில் 4 ஆசனங்களையும், மாத்தளையில் 4 ஆசனங்களையும், பதுளையில் 3 ஆசனங்களையும், கொழும்பில் 3 ஆசனங்களையும், கம்பஹாவில் 2 ஆசனங்களையும், காலியில் 2 ஆசனங்களையும், பொலன்னறுவை, மாத்தறை, கேகாலை, வவுனியா, முல்லைத்தீவு, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு ஆசனங்கள் வீதம் 6 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகரசபையில் 12 ஆசனங்களும், அட்டாளைச்சேனை பிரதேச சபையில் 8 ஆசனங்களும், சம்மாந்துறை பிரதேச சபையில் 8 ஆசனங்களும், பொத்துவில் பிரதேச சபையில் 6 ஆசனங்களும், நிந்தவூர் பிரதேச சபையில் 6 ஆசனங்களும், இறக்காமம் பிரதேச சபையில் 5 ஆசனங்களும், அக்கரைப்பற்று மாநகர சபையில் 4 ஆசனங்களும், தெஹியத்தகண்டிய பிரதேச சபை, அக்கரைப்பற்று பிரதே சபை, காரைதீவு பிரதேச சபை, நாவிதன்வெளி பிரதேச சபை ஆகியவற்றில் தலா 2 ஆசனங்கள் வீதமும், பதியத்தலாவ பிரதேச சபை மற்றும் அம்பாறை நகரசபை ஆகியவற்றில் தலா ஒரு ஆசனம் வீதம் 59 ஆசனங்கள் வெல்லப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பிரதேச சபையில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு சார்பாக 5 ஆசனங்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக 4 ஆசனங்களும் வெல்லப்பட்டுள்ளன. ஓட்டமாவடி பிரதேச சபையில் சுயேட்சைக்குழு சார்பாக 8 ஆசனங்களும், காத்தான்குடி நகர சபையில் 3 ஆசனங்களும், வாழைச்சேனை பிரதேச சபையில் 3 ஆசனங்களும், மண்முனைப்பற்று பிரதேச சபையில் ஒரு ஆசனமும் கிடைத்துள்ளன. முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மட்டக்களப்பில் மொத்தமாக 23 ஆசனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் மரச் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டு 27 ஆசனங்கள் பெறப்பட்டுள்ளன. கிண்ணியா பிரதேச சபையில் 7 ஆசனங்களும், மூதூர் பிரதேச சபையில் 7 ஆசனங்களும், குச்சவெளி பிரதேச சபையில் 4 ஆசனங்களும், கிண்ணியா நகர சபையில் 4 ஆசனங்களும், தம்பலகாமம் பிரதேச சபையில் 3 ஆசனங்களும், திருகோணமலை நகரசபையில் 1 ஆசனமும், திருகோணமலை நகர பிரதேச சபையில் 1 ஆசனமும் கைப்பற்றப்பட்டள்ளன.

புத்தளம் மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்டு புத்தளம் நகர சபையில் 7 ஆசனங்களும், கல்பிட்டி பிரதேச சபையில் 4 ஆசனங்களும், புத்தளம் பிரதேச சபையில் 3 ஆசனங்களும், வண்ணாத்தவில்லு பிரதேச சபையில் 2 ஆசனங்களும், நாத்தாண்டிய பிரதேச சபையில் ஒரு ஆசனம் என மொத்தமாக 17 ஆசனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சபைகளில் கூட்டாட்சி அமைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று, கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளன. எதிர்வரும் காலங்களில் இதற்கான மேலதிக பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.

Previous Post

தனியாட்சி அமைப்பதற்கு யோசனை முன்வைப்பு

Next Post

தமிழர் பகுதிகளில் எவரும் ஆட்சியமைக்க முடியாத நிலையை ஏற்படுத்திய தேர்தல் முறை

Next Post

தமிழர் பகுதிகளில் எவரும் ஆட்சியமைக்க முடியாத நிலையை ஏற்படுத்திய தேர்தல் முறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரலாறு படைத்தது வெஸ்லி கல்லூரி

35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரலாறு படைத்தது வெஸ்லி கல்லூரி

July 6, 2026
பழ.நெடுமாறனை சந்தித்தனர் தமிழ் தேசிய பேரவையினர் 

பழ.நெடுமாறனை சந்தித்தனர் தமிழ் தேசிய பேரவையினர் 

July 6, 2026
முழு உலகுக்கும் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்கள் எமக்குப் பிள்ளைகளே!

முழு உலகுக்கும் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்கள் எமக்குப் பிள்ளைகளே!

July 6, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார விஜயம்

July 6, 2026

Recent News

35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரலாறு படைத்தது வெஸ்லி கல்லூரி

35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரலாறு படைத்தது வெஸ்லி கல்லூரி

July 6, 2026
பழ.நெடுமாறனை சந்தித்தனர் தமிழ் தேசிய பேரவையினர் 

பழ.நெடுமாறனை சந்தித்தனர் தமிழ் தேசிய பேரவையினர் 

July 6, 2026
முழு உலகுக்கும் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்கள் எமக்குப் பிள்ளைகளே!

முழு உலகுக்கும் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்கள் எமக்குப் பிள்ளைகளே!

July 6, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார விஜயம்

July 6, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures