Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

IMFஇற்கு மீண்டும் செல்லாதவகையில் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய வேண்டும் | அலிசப்ரி

March 28, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தற்காலிக மனிதாபிமான நிவாரணமே ஒரு இலட்சம் | நீதி அமைச்சர் சப்ரி

சர்வதேச நாணய நிதியத்துக்கு மீண்டும் செல்லாதவகையில் எமது பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்துகொள்ளவேண்டும்.

இதுதான் எங்களுக்கு முன்னிருக்கும் சவாலாகும். கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் எமது பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்துகொள்ள முடியுமாகும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

வறிய மக்களுக்கு வழங்கிவைப்பதற்காக சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உலர் உணவு பொதிகளை விநியோகிக்கும் ஆரம்ப நிகழ்வு கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில்  ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியை பெற்றுக்கொள்ள இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் பரிஸ் சமூகம் உட்டப உலக நாடுகள் எமக்கு உதவியாக இருந்தது.

இந்த உதவி கிடைத்த பின்னர் மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தால், ஜனரஞ்கமற்ற தீர்மானங்களை எடுக்க வேண்டி ஏற்படுகிறது. நாங்கள் சர்வதேச நாணய நிதியத்துக்கு 16தடவைகள் சென்றிருக்கிறோம். தற்போது 17ஆவது தடவையாகவே சென்றிருக்கிறோம். 

அதனால் இதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்வதை நாங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். மீண்டும் சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லாதவகையில் எமது பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்துகொள்ளவேண்டும். இதுதான் எங்களுக்கு முன்னிருக்கும் சவாலாகும். அதனை எங்களால் செய்ய முடியும். 

ஏனெனில் 1991இல் இந்தியாவும் இவ்வாறாதொரு பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி இருந்தது. என்றாலும் அவர்கள் கட்சி, நிறம் பேதங்களை மறந்து அவர்கள் ஒன்றிணைந்து பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ததன் மூலம் அந்த நெருக்கடியில் இருந்து மீண்டார்கள். 

அதனால் நாங்கள் அரசியல் கட்சி பேதங்களை மறந்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்பட்டாமல் எங்களாலும் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்துகொள்ள முடியும். 

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை தொடர்ந்து உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றன. அதேபோல் பல்வேறு நாடுகளில் இருந்து எமக்கு உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றன. 

அதனால் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியின் மூலம்  இலங்கை வங்குராேத்து என்ற அந்த அடையாளத்தை எமக்கு நீக்கிக்கொள்ள முடிந்துள்ளது என்றே நான் நினைக்கிறேன்.

என்றாலும் இது ஆரம்பமாகும். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமது பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய நடவடிக்கை எடுத்தால் மீண்டும் சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்ல வேண்டி ஏற்படாது என்றார்.

Previous Post

காதலியின் தாயாரை வாளைக்காட்டி அச்சுறுத்திய காதலனும் அவரது நண்பனும் கைது

Next Post

25 வயதுடைய பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு

Next Post
வாகன விபத்தில் உப காவல்துறை அதிகாரி பலி

25 வயதுடைய பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026

Recent News

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures