Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மஹிந்த உள்ளிட்ட எட்டு பேருக்கு நீதிமன்றத் தடை உத்தரவு

August 1, 2016
in News, Politics
0
மஹிந்த உள்ளிட்ட எட்டு பேருக்கு நீதிமன்றத் தடை உத்தரவு

மஹிந்த உள்ளிட்ட எட்டு பேருக்கு நீதிமன்றத் தடை உத்தரவு

பதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்கள் எட்டுப் பேருக்கு கொழும்பு நீதிமன்றம் தடை உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரை இன்று கொழும்பை வந்தடையவுள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன், கலவரங்களும் ஏற்படலாம் என்று பேலியாகொடை பொலிசார் கொழும்பு நீதிமன்றத்தில் அவசர மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

இதனை அடுத்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமலும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்படாத வகையிலும் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தும் வகையிலான தடை உத்தரவொன்றை கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் பிறப்பித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க, மஹிந்தானந்த அளுத்கமகே, லொஹான் ரத்வத்தை, உதய கம்மன்பில, கனக ஹேரத், பிரசன்ன ரணவீர, மற்றும் அமில குமாரசிங்க ஆகியோருக்கு எதிராகவே குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் கொழும்பு மாநகரத்தினுள் பொது இடமொன்றில் திடீர் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தும் கூட்டு எதிர்க்கட்சியினரின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற காரணத்தை முன்னிட்டு அவ்வாறான பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுமிடத்து கூட்டு எதிர்க்கட்சியினர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள நேரிடும் சூழல் உருவாகியுள்ளது.

Tags: Featured
Previous Post

கூகுள் பிளேயில் தரப்பட்டுள்ள ஃபேமிலி லைப்ரரி பற்றி தெரியுமா?

Next Post

வீதி வலம் வருவதற்குப் பதிலாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைவது அரசியல்வாதிகளின் பொறுப்பாகும் : ஜனாதிபதி

Next Post
வீதி வலம் வருவதற்குப் பதிலாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைவது அரசியல்வாதிகளின் பொறுப்பாகும் : ஜனாதிபதி

வீதி வலம் வருவதற்குப் பதிலாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைவது அரசியல்வாதிகளின் பொறுப்பாகும் : ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures