இலங்கையில் மற்றுமொரு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 73 வயதுடைய நபர் இனங்காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த நபருடன் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.











