கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்திற்கு சென்ற நிலையில் அலையில் அடித்துச் செல்லப்பட்டு இந்தியாவில் கரை ஒதுங்கியுள்ள எஞ்சிய படகுகளையும் மீட்டுத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கச்சதீவு திருவிழா கடந்த 7 ம் திகதி இடம்பெற்ற நிலையில் இந்த படகுகள் அலையில் அடித்து செல்லப்பட்டிருந்தன .
மறுநாள் இந்தியாவில் கரை ஒதுங்கிய 3 படகுகளுடன் அனலை தீவில் இருந்து அலையில் அடித்துச் செல்லப்பட ஓர் படகுமாக 4 படகுகள் தற்போது இந்தியாவில் இருக்கின்றன.
இவ்வாறு அடித்துச் செல்லப்பட்ட படகுகளில் 7 படகுகளை மீட்டு வழங்கிய இந்தியா , எஞ்சிய 4 படகுகளையும் வழங்கி மீனவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்க்கப்பட்டுள்ளது .

