பொதுத்தேர்தல் பிரசாங்களின்போது பேஸ்புக் பக்கங்களும் இந்தமுறை கண்காணிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரல் என்ற சுதந்திர தேர்தலுக்கான மக்கள் இயக்கம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
தேர்தல் வேட்பாளர்களின் பேஸ்புக் பக்கங்கள் மற்றும் கட்சிகளின் பேஸ்புக் பக்கங்கள் என்பன கண்காணிக்கப்படவுள்ளதாக பெப்ரலின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது பெப்ரல் இயக்கம் 11 ஆயிரம் பேஸ்புக் பக்கங்களை கண்காணிப்பு செய்தது.
ஜனாதிபதி தேர்தலின்போது 35 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் இந்த 11ஆயிரம் பேஸ்புக் பக்கங்கள் கண்காணிக்கப்பட்டன.
இந்தநிலையில் பொதுத்தேர்தலில் 4000 வேட்பாளர்கள் போட்டியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுவதால் இணைய பிரசாரங்கள் முன்னிலைப்பெறும்.
எனவே அவற்றை கண்காணிக்கவேண்டிய அவசியம் உள்ளது என்று பெப்ரலின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

