பிரதமரின் ஊடக செயலாளராக விஜயாநந்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் விஜயாநந்த ஹேரத், அவருடைய ஊடக ஒருங்கிணைப்பு செயலாளராக கடமையாற்றியுள்ளார்.
அத்துடன், மஹிந்த ராஜபக்ஷ மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சராக இருந்த காலத்தில் அவருடைய ஊடக அதிகாரியாகவும் இவர் செயற்பட்டுள்ளார்.
விஜயாநந்த ஹேரத் 2016 ஆம் ஆண்டு முதல் இவர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக ஆலோசகராக கடமையாற்றி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

