Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடந்த 5 வருடங்களாக துன்புறுத்தல்களையே செய்தார்கள் – கெஹலிய ரம்புக்வெல

December 31, 2019
in News, Politics, World
0

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் கைது உட்பட பல்வேறு விசாரணைகளிலும், நீதிமன்ற செயற்பாடுகளிலும் அரச உயர்பீடத்திலிருந்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படமாட்டாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“கடந்த 05 வருடங்களாக துன்புறுத்தல்களையே அவர்கள் செய்தார்கள். அவர்கள்தான் பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவு அதிகாரிகளை அலரிமாளிகைக்கு அழைத்து, ஒவ்வொரு வாரமும் ராஜபக்சவினரை விசாரணைக்கு அழைக்குமாறும், விளக்கமறியலில் வைக்குமாறும் வழக்கு இல்லாவிட்டால் உருவாக்கிக் கொடுக்கும்படியும் வலியுறுத்தியிருக்கின்றனர்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் முன்னாள் பிரதி சொலிசிடர் ஜெனரலும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான திணைக்களத்தின் முன்னாள் பிரதானியுமான சுஹத கம்லத் இதனைக் கூறியுள்ளார்.

அலரிமாளிகைக்கு வரவழைத்து சட்டத்தை வளைப்பது பற்றி ஆலோசனை கூறியுள்ளனர். அதில் அநுரகுமார, பாட்டலி சம்பிக்க ரணவக்க உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

அதேபோல ஊழல் தடுப்பு ஆணைக்குழு முன்னாள் தலைவர் தில்ருக்ஷியும்கூட, இவர்களுடன் பணிசெய்ய முடியாது என்பதை தெரிவித்திருந்தார்.

மேலும் எவ்.சி.ஐ.டி முன்னாள் பிரதானி ரவி வைத்தியலங்காரக்கும் கடந்த ஆட்சியாளர்களால் அரசியல் அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதே சிந்தனையில்தான் அவர்கள் இன்றும் உள்ளனர்.

சட்டம் ஒழுங்கு கட்டமைப்பில் எந்தவொரு அரசியல் அழுத்தமும் நாங்கள் மேற்கொள்ளவில்லை. அலரிமாளிகையில் முன்புபோல பேச்சுக்களும் நடத்துவதில்லை.

கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடுபவர்கள் அவர்கள்தான். தேர்தல் நெருங்குகையில் அதில் தோல்வி நிச்சயம் என்பதை அறிந்து அவர்கள் பொய்ப்பிரசாரங்களை செய்தார்கள். இறுதியில் முதலை கதையையும் வெளியிட்டார்கள்.

இந்நாட்டு மக்கள் அடிமுட்டாள்கள் என்று நினைத்த ராஜித சேனாரத்னவே இன்று முட்டாளாகிவிட்டார். இந்த நாட்டின் சட்டம் ஒழுங்கு, நீதிமன்றம், இலஞ்ச தடுப்பு ஆணைக்குழு என்பன சுயாதீனமாக செயற்படுமானால் அதில் பிரச்சினையில்லை.

தங்களால் விதைத்ததையே அறுவடை செய்வார்கள். இந்த நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் ஏற்பட்டுள்ளது. 71களில் கலவரம், 88,89களில் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதனால் மக்களின் நம்பிக்கை வீழ்ந்திருந்தது.

ஆனாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தற்போது இளைஞர்கள் இணைந்து நாட்டை அழகுபடுத்த தொடங்கியிருக்கின்றனர். அரசாங்கம் மீது நம்பிக்கை இருப்பதாக அவர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர்” என கூறியுள்ளார்.

Previous Post

அரசியலமைப்பை மீறிச் செயற்பட்ட கோட்டா – ஐக்கிய தேசியக் கட்சி குற்றசாட்டு

Next Post

கோர விபத்து – 4 விமான படை வீரர்கள் பலி

Next Post

கோர விபத்து - 4 விமான படை வீரர்கள் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் | சுனில் ஹந்துனெத்தி 

July 10, 2026
பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

July 9, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

July 9, 2026
அர்ச்சுனாவை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள் :விமல் வீரவன்ச அறிவிப்பு

ஆடையை கழற்றிக் காட்டவா?! – பாராளுமன்றத்தில் அர்ச்சுனா தடாலடி பேச்சு    

July 9, 2026

Recent News

ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் | சுனில் ஹந்துனெத்தி 

July 10, 2026
பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

July 9, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

July 9, 2026
அர்ச்சுனாவை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள் :விமல் வீரவன்ச அறிவிப்பு

ஆடையை கழற்றிக் காட்டவா?! – பாராளுமன்றத்தில் அர்ச்சுனா தடாலடி பேச்சு    

July 9, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures