Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அமைச்சரவையை உருவாக்குவதில் தெரீசா மே அதிரடி

July 15, 2016
in News, Politics
0
அமைச்சரவையை உருவாக்குவதில் தெரீசா மே அதிரடி

அமைச்சரவையை உருவாக்குவதில் தெரீசா மே அதிரடி

பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற தெரீசா மே, முன்னாள் பிரதமர் டேவிட் கேமரனின் ஆதரவாளர்கள் பலரை நீக்கி தனது அமைச்சரவை மாற்றத்தை நிறைவு செய்துள்ளார்.

இந்த அமைச்சரவையில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டும் என்ற தரப்பு மற்றும் நீடித்திருக்க வேண்டும் என்று கூறிய இரண்டு தரப்பினருக்கும் இடமளித்துள்ளார்.

விலக வேண்டும் என்ற தரப்பிலிருந்து புதிய வெளியுறவு அமைச்சராக போரிஸ் ஜான்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமைப் பதவிக்குத் தன்னுடன் போட்டியிட்டு பின்னர் விலகிக் கொண்ட ஆன்ரியா லீட்சம், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறார்.

டேவிட் கேமரன் அமைச்சரவையில் இருந்த ஜார்ஜ் ஆஸ்பர்ன், மைக்கோல் கோவ், ஜான் விட்டிங்டேல், நிக்கி மோர்கன், ஆலிவர் லெல்வின் ஆகியோர் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

புதிதாக உருவாக்கப்பட்ட பிரெக்ஸிட் அமைச்சர் பொறுப்பில் டேவிட் டேவிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் நடைமுறைகள் குறித்த செயல்பாடுகளை அவர் மேற்கொள்வார்.

புதிதாக உருவாக்கப்பட்ட இன்னொரு பதவியான சர்வதேச வர்த்தக அமைச்சர் பதவியில், லியம் ஃபாக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் எரிசக்தித்துறை அமைச்சர் ஆம்பர் ரூட், தெரீசா மே முன்னர் வகித்து வந்த உள்துறை அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரவையில் ஆண்கள் 70 சதம், பெண்கள் 30ச தம் என்ற அளவில் நியமிக்கப்பட்டுள்ளனர். கேபினட் அமைச்சர்களில், தெரீசா மே உள்பட 16 பேர் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டவர்கள். ஏழு பேர், எதிரணியைச் சேர்ந்தவர்கள்.

தெரீசா மே தனது அமைச்சரவையை ஏற்படுத்தியிருக்கும் விதம், பாராட்டத்தக்க வகையில் கருணை காட்டப்படாத ஒன்று என கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் வெளியுறவுச் செயலர் சர் மால்கம் ரிஃப்கின்ட் குறிப்பிட்டுள்ளார்.

நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்பனை அமைச்சரவையில் இருந்து நீக்கிய தெரீசா, அவருக்கு அமைச்சரவையில் இடமே தராதது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Tags: Featured
Previous Post

உள்ஆய்வு விசாரனை முடிவில் 14மில்லியன் டொலர்கள் பெறுமதியான போதை பொருட்கள் பறிமுதல்

Next Post

பெற்ற குழந்தையை கழிவறைக் குழிக்குள் வீசிய தாய்!

Next Post

பெற்ற குழந்தையை கழிவறைக் குழிக்குள் வீசிய தாய்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures