Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

55 வருடத்திற்கு முன்பு தனுஷ்கோடி கடலில் மூழ்கிய பாலம் தற்போது வெளியில் தெரிகின்றது

June 23, 2019
in News, Politics, World
0

55 வருட முன்பு புயலால் கடலில் மூழ்கிய சாலை பாலம் தனுஷ்கோடியில் தெளிவாக வெளியே தெரிகின்றது. 1964-ம் ஆண்டுக்கு முன்பு வரையிலும் தனுஷ்கோடி சாலை மற்றும் புகையிரத போக்குவரத்து வசதி இருந்ததுடன் அப்பகுதியில் புகையிரத நிலையம், பாடசாலை;, மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன்கூடிய பெரிய தொழில் நகரமாக விளங்கி இருந்தது.

55 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் இருந்து தனுஷ்கோடி வரை கடல் நீரால் சாலை பாதிக்காத வகையில் பெரிய கான்கிரீட் குழாய்கள் அமைத்து கடல் நீர் உள்ளே வந்து செல்லும் வகையில் பாலம் கட்டி சாலைகள் அமைத்திருந்தனர்.

இந்தநிலையில் 1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயல் மற்றும் கடல் கொந்தளிப்பால் தனுஷ்கோடி நகரம் முழுமையாக அழிந்து போனதுடன் அனைத்து கட்டிடங்களும் மண்ணோடு மண்ணாக போயிருந்தன. மேலும் இந்த புயலில் எம்.ஆர்.சத்திரம்-தனுஷ்கோடி இடையே அமைக்கப்பட்டிருந்த சாலைபாலமானது கடலில் அடித்து செல்லப்பட்டு கடல் நீரில் மூழ்கிபோயிருந்தது.

அத்துடன் புயலுக்கு பிறகு தனுஷ்கோடி பகுதி பொது மக்கள் வாழ தகுதியற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் இன்றுவரை மீன்பிடி தொழிலை நம்பியுள்ள மீனவர்கள் மட்டுமே தான் அங்கு தற்காலிகமாக குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தனுஷ்கோடி பகுதியில் கடந்த சில வாரங்களாக வழக்கத்தை காட்டிலும் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன்,கடல் கொந்தளிப்பாக காணப்பட்டு வருகிறது.இந்த கடல் கொந்தளிப்பு மற்றும் கடல் அரிப்பால் புயலுக்கு முன்பு கட்டப்பட்டு புயலில் சேதமாகி கடலில் மூழ்கிப்போன சாலைப் பாலம் தற்போது தெளிவாக வெளியே தெரிந்து வருகிறது.

கடல் நீர் சென்று திரும்பும் வகையில் அமைக்கப்பட்டதற்கு அடையாளமாக பெரிய கான்ரீட் குழாய்கள் மற்றும் கற்களுடன் தெளிவாக தெரிந்து வரும் பாலத்தை மீனவர்களும், சுற்றுலா பயணிகளும் மிகுந்த ஆச்சரியத்தோடு பார்த்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Previous Post

இன்று ஆரம்பமாகிறது போதை ஒழிப்பு வாரம்

Next Post

தமிழீழ விடுதலை புலிகளின் போராட்டத்திற்கு அடிப்படை காரணங்கள் இருக்கின்றது:சாள்ஸ்

Next Post

தமிழீழ விடுதலை புலிகளின் போராட்டத்திற்கு அடிப்படை காரணங்கள் இருக்கின்றது:சாள்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures