நாட்டு அரசியலில் தங்களது சொந்த நலன்களை பெற்றுக் கொள்வதற்காக அமுக்கக் குழுக்களை உருவாக்கி அழுத்தங்களைக் கொடுத்து வருவதாகவும், இதனால், நாட்டின் தேசிய இலக்குகள் புறக்கணிக்கப்படுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமாகிய சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டையில் நேற்று (20) நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
தமக்கு அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கே சிலர் முயற்சிக்கின்றனர். தங்களது குடும்ப சொத்து என நாட்டின் பொறுப்புக்களை சிலர் நினைத்துள்ளனர். தனக்குப் பின்னர், தனது பிள்ளைகளுக்கு, சகோதரர்களுக்கு என பகிர்ந்து கொடுக்க முயற்சிக்கின்றனர்.
அதிகாரத்துக்கு வர வேண்டும் என்ற பேராசைதான் இவர்களை இயக்குகின்றது. இந்த அதிகாரத்தை யாரிடம் கொடுப்பது என பொது மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டார்.

