பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தையும் தாண்டியுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.
வழமையான நாட்களில் நெடுஞ்சாலைகளில் சுமார் 75 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரையிலான வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுகின்றன.
எனினும், இந்தப் பண்டிகைக் காலத்தில் நாளொன்றிற்கு ஒரு லட்சத்து ஐயாயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் வரையிலான வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாகனங்களின் நெரிசாலைக் குறைப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

