Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கை பற்றிய அறிக்கையினை அழுத்தம் திருத்தமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்: அல் ஹூசேன்!

July 5, 2016
in News
0
ஐ.நாவில் மற்றுமொரு சவாலையும் கடக்குமா சிறிலங்கா?

இலங்கை பற்றிய அறிக்கையினை அழுத்தம் திருத்தமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்: அல் ஹூசேன்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32வது கூட்டத்தொடரில் இன்று (29) இலங்கை தொடர்பிலான விடயம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூசேன் இலங்கை மற்றும் மியான்மார் பற்றி உரையாற்றினார்.

இலங்கைப் பற்றி கூட்டத்தொடரில் கருத்து தெரிவிக்கும் போது,

தனது அறிக்கையினை அழுத்தம் திருத்தமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் இதன் போது, சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்பட வேண்டும் , காணிகள் மீள கையளிக்கப்பட வேண்டும் போன்ற பல்வேறு விடயங்களை இதன்போது முன் வைத்துள்ளார்.

மேலும், ஐரோப்பிய யூனியன் சார்பாக நெதர்லாந்து உரையாற்றியதுடன் சுவிஸ்சர்லாந்து, பிரிட்டன் தென் கொரியா போன்ற நாடுகளும் இலங்கை பற்றிய உரையில் அறிக்கையினை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என கூறியுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

இதன்போது, ரஷ்யா இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் தலையிடமாட்டாது எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், ஐக்கிய அமெரிக்கா இன்னும் சில நொடிகளில் தனது கருத்தினை வெளியிடவுள்ளது.

18 மாத கால அவகாசத்தினை இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் தீர்மானம் வழங்கியிருந்ததோடு, ஒன்பதாவது மாதத்தில் வாய்மொழி அறிக்கையொன்றினை ஆணையாளர் சபைக்கு தெரிவிக்க வேண்டுமென தீர்மானம் வலியுறுத்தியிருந்தமையும் குறிப்படத்தக்கது.

Tags: Featured
Previous Post

அமெரிக்காவில் இருமொழிக் கொள்கையில் தமிழுக்கு அங்கீகாரம்

Next Post

சித்திரவதை தொடர்பான முறைபாடுகள் அதிகரிப்பு! மனித உரிமைகள் ஆணைக்குழு

Next Post

சித்திரவதை தொடர்பான முறைபாடுகள் அதிகரிப்பு! மனித உரிமைகள் ஆணைக்குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures