பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசு தேவநாணயக்கார தெரிவித்தார்.
நேற்று பிரதமர் செயலகத்தில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் அடங்கிய சபாநாயகரின் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

