கூட்டு எதிரணி கூச்சல் போடும் அளவுக்கு ஒரு கூட்டத்தை கூட்ட முடியும் என தாம் கருதுவதில்லையென மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் உயர் பீட உறுப்பினர் கே.டீ. லால்காந்த தெரிவித்தார்.
கூட்டு எதிரணியின் நாளைய ஆர்ப்பாட்டம் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
நாளைய கூட்டம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ அவ்வளவு அலட்டிக் கொள்ளவில்லை. தம்மைச் சுற்றி 100 பேரைக் கூட்டிக் கொள்ள முடியாத சிலரே அதிகம் கூச்சலிட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

