Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மாவீரர்களுக்கும், தாயக விடுதலைப் போரின்போது கொல்லப்பட்ட மக்களுக்குமான நினைவு வணக்க நிகழ்வு

May 31, 2016
in News, Politics
0

மாவீரர்களுக்கும், தாயக விடுதலைப் போரின்போது கொல்லப்பட்ட மக்களுக்குமான நினைவு வணக்க நிகழ்வு

வைகாசி மாதத்தில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களுக்கும்,தாயக விடுதலைப் போரின்போது கொல்லப்பட்ட எமது மக்களுக்குமான நினைவு வணக்க நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு உலகத் தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்பேட் OX17 3NX என்னும் முகவரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பொதுச் சுடரினை மில்றன்கீன்ஸ் தமிழ் கல்விக்கழகத்தின் தலைவர் குலசேகரம் சுதர்சன் அவர்களும், ஐக்கிய இராச்சியத்தின் தேசியக் கொடியை உலகத் தமிழர் வரலாற்று மையத்தை சேர்ந்த மயில்வாகனம் அவர்களும்,

தமிழீழ தேசியக் கொடியினை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூத்த போராளி அன்சார் அவர்களும் ஏற்றினர்.

பொதுத் தூபிக்கான மலர்மாலை அணிவித்து மலர் வணக்கத்தை கப்ரன் தமிழ்வாணன் அவர்களின் சகோதரன் வசந் அவர்கள் செலுத்தினார்.

தொடர்ந்து மண்டப நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் மாவீரர் நினைவுத்தூபிக்கான ஈகைச் சுடரினை 10/05/1988 அன்று வீரச்சாவடைந்த லெப் வெங்கடேஸ் மேலும் இரு மாவீரர்களின் தாயாரான திருமதி இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம் அவர்களும்,

மலர் மாலையினை உலகத் தமிழர் வரலாற்று மையத்தை சேர்ந்த சத்தியரூபன் அவர்களும், அணிவித்து வணக்கம் செலுத்தினர்.

மக்களுக்கான நினைவுத்தூபிக்கு ஈகைச் சுடரினை தேசியச் செயற்பாட்டாளர் திருமதி ஜெசிந்தா அவர்களும், மலர் மாலையினை மில்றன்கீன்ஸ் தாயகம் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த யாழி அவர்களும் அணிவித்து வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து மலர் வணக்கத்தினை தேசியச் செயற்பாட்டாளர் திரு. அமர்நாத் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மாவீரர்கள் மற்றும் மக்களுக்கான நினைவுத் தூபிகளுக்கு அனைத்து மக்களும் ஈகைச் சுடரேற்றி மலர் வணக்கமும் அகவணக்கமும் செலுத்தினர்.

மேலும் மாவீரர் நினைவுப் பாடல்களை திரு. சுரேஷ், மைக்கல் ஆகியோர் பாடினர்.

தலைமையுரையினை உலகத் தமிழர் வரலாற்று மையத்தைச் சேர்ந்த சங்கீதன் அவர்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மக்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் தொடர்பான நினைவுரையினை புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் செயலாளரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை துணையமைச்சருமான யோகலிங்கம் அவர்களும், மாவீரர்கள் தொடர்பான சிறப்புரையினை போராளி திரு. இன்பன் அவர்களும் நிகழ்த்தினர்.

இறுதியாக மாவீரர் நினைவுப் பாடலுடன் உறுதியுரை எடுத்து நிகழ்வுகள் நிறைவடைந்தன.

Tags: Featured
Previous Post

பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வந்த 600 கற்பழிப்பு மிரட்டல்கள்

Next Post

சூர்யா வாலிபரை தாக்கிய வழக்கில் திடிர் திருப்பம்

Next Post

சூர்யா வாலிபரை தாக்கிய வழக்கில் திடிர் திருப்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures